புதன், 7 ஏப்ரல், 2010

வருத்திற்குரிய நாள்.

இன்று இரன்டு வகைகளில் மிகவும் வருத்திற்குரிய நாள்.


முதலாவது நேற்று இரவே ஆரம்பித்து விட்டது. எனது செல்போன் அறுனூற்று ஐம்பது ருபாய் செலவு செய்து இரண்டு மணி நெரம் கழித்து வீடு வந்த பின்னர் பழையபடி செத்து விட்டது. இதற்காக இருபத்தி ஐந்து நாட்கள் காத்திருந்தேன். எனது இப்பொதைய பொருளாதார சூழலில் 650 என்பது பெரிய இழப்பு. போக இது ஆகாது என தெரிந்து இருந்தால் மெலும் ஒரு 600 போட்டு வெறு ஒரு சின்ன போன் வாங்கி இருக்கலாம். சர்வீஸ் சென்டரிடம் போய் வம்பு பண்ணும் எண்னமும் இல்லை. ஏற்கனவே வேண்டிய அளவுக்கு பண்ணியதால் இந்த விளைவாக இருக்கலாம். மீண்டும் போய் தெவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திக் கொள்ள எண்ணமில்லை.

இரண்டாவது மிக முக்கியமானது. ஆர்குட்டில் உலகத் தமில் மக்கள் அரங்கில் இன்று ஒரு மிகப்பெரும் அசிங்கத்து உள்ளாக்கிக் கொண்டேன். பல்லவர்களின் கால வரையறை குறித்த ஒரு செய்தியை மிக மட்டமாக தப்பாகச் சொல்லி விட்டேன். தப்பு என்பதை விடவும் அதை நான் சொன்ன விதம் வாதம் பண்னிய தமிழன்பன் என்பவரை மட்டப்படுத்தும் தொனியில் கிண்டலாக சொல்லி இருந்தேன். நேரில் இது நடந்து இர்ருந்தால் அரங்கே காறித்துப்பி இருந்திருக்கும். கம்ப்பியூட்டர் என்பதால் அந்தளவு போகவில்லை. என்றாலும் ஒரு மனிதனை மட்டப்படுத்த மகா மட்டமான ஒரு தப்பான ஒரு தகவலை சொன்னது மிகவும் வருத்தமாக உள்ளது. அது எனது கவனக்குறைவு அல்ல. நான் உள்வாங்கிக் கொன்டதிலோ அல்லது நினைவில் நிறுத்திக் கொண்டதிலோ நேர்ந்த பிழை. மஹெந்திர வர்ம பல்லவனின் காலம் ராஜராஜனின் கால்த்துக்கும் பிந்தியது என்ற மிகப்பெரும் தவறு அது. பள்ளியிலெல்லாம் இதை படித்ததாக நினைவில்லை. எனது தாத்தாவின் MA புத்தகங்களில் படித்தது தான். அதிலேயெ தவறாக புரிந்து இருக்கிறேன். இதே தவறை இதற்கு முன் உறவினர் ஒருவருடன் மஹாபலிபுரம் போன போதும் செய்திருக்கிறேன். நமது மூளை நினைப்பது எல்லாம் உண்மை என நம்ப வைக்கிறது. அதனால்தால் ஆர்க்குட்டில் அவ்வளவு தெனாவெட்டாக இந்த தகவலை தப்பாக கொடுக்க சொன்னது. எதிராளிக்கு பெருத்த கொண்டாட்டம். எனக்கொ பெருத்த வருத்தம். என்றாலும் இன்றாவது இது தெளிந்ததே என்ற சின்ன திருப்தி. மேலும் மஹெந்திர பல்லவர் தெலுங்கில் எழுதினார் எனவும் எனது நினைவு சொல்கிறது. அதையும் எழுதி இருக்கிறேன் . அதையும் சரி பார்க்கனும். இந்த நினைவுக்கோளாறால் நான் படித்த எல்லாமெ இனி சந்தேகமாக இருக்கிறது. பொது இடத்தில் கவனமாக பேசனும். யொசித்தும் பேசனும்.

கருத்துகள் இல்லை: