புதன், 1 ஜூன், 2011

இரண்டு வார கால அதிமுக ஆட்சி


ஜெயலலிதா தலைமையிலான மிகுந்த பலம் கொண்ட அதிமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வாரா காலங்கள் முடிந்து விட்டன. மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை மட்டுமே விரும்பியுள்ளதாக நான் நினைக்கிறேன். இந்த ஆட்சி குறித்த எதிர்பார்ப்பு அவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் ஆட்சி குறித்த சில முணுமுணுப்புகள் இப்போதே தொடங்கி விட்டன. மின்வெட்டை இவர்களால் உடனடியாக குறைக்க முடியாது என்பது உண்மையானாலும் குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் / எடுக்கிறார்கள் என்பது குறித்த விளக்கத்தை தெரிவிக்க வேண்டியது அரசின் அதாவது முதல்வர் ஜெயலலிதாவின் கடமை. இனி தமிழக அரசு என்றாலே முதல்வர் ஜெயலலிதாதானே?

சட்டசபை இடமாற்றம், மேலவை கைவிரிப்பு நலத்திட்ட பெர்யர்மாற்றங்கள் என ரணகளமாக தொன்டங்கிய இந்த அரசின் எதேச்சதிகாரப் போகினை தட்டிக் கேட்கும் மனனிலையில் திமுக இல்லை. அதற்கு இப்போது டெல்லி திகார் ஜெயிலில் கிளை திறக்கும் பணினெருக்கடி. தேமுதிக ஒன்றும் செய்ய முடியாத செத்த பாம்பு. மதிமுக மட்டும் இதை எதிர்த்து சில சுவரொட்டிகள் ஒட்டியதாக படித்தேன்.

இந்த அரசின் ஆரம்பகால அட்டூழியங்களில் என்னை மிகவும் வெறுப்படைய செய்தது சமச்சீர் கல்வியை தலைமுழுகியது. அதன் குறை நிறைகளை சீர்தூக்கி இன்ன்னும் கொஞ்சம் பொறுமையாக முடிவெடுத்து இருக்கலாஅம். இது பிள்ளைகளின் எதிர்கலம். அவர்கள் குழம்பித்திரியும் வகையில் இந்த அரசுகள் நடவடிக்கை உள்ளன. கல்விக்கட்டணத்தை முறைப்படுத்த முதல்வர் முனையாதது அவரின் மேல் சந்தேகம் கொள்ள வைக்கிறது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்.

சுண்டக்க மந்திரிகளைப் போட்டுக் கொண்டு அவர்கள் கைகட்டி வாய் பொத்தி நிற்பார்கள் என்று தனியதிகாரம் படிக்கும் எண்ணம் முதல்வருக்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு வலுவாக உள்ளது. பொறுத்துப் பார்ப்போம்.