புதன், 21 ஏப்ரல், 2010

அசிங்கமான தொழிலை பண்ணி வரும் சன் டி வி

கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. அது சன் டி வி யில் டீலா நோ டீலா என்கிற சூதாட்ட நிகழ்ச்சி. சமிபத்தில் எனக்கு தெரிய வந்த மற்றுமொரு அயோக்கியத்தனமான நிகழ்ச்சி. அதில் ஒரு குடும்பத்தையே அழ வைத்து வியாபாரம் பார்க்கிறார்கள். நான் முதலில் பார்த்த அன்று ஒருவர் மிக சொற்பமன பணம் மட்டுமே அந்த சூதாட்டத்தில் ஜெயித்தார். எனவே அவரின் குடும்பமே அழுகிறது. அதற்கு தோதான பின்னணி இசை. இந்த நிகழ்ச்சியில் ஜெயித்து தம் குடும்ப கஷ்டங்களை தீர்க்கலாம் என்று இருந்தார்களாம். நிகச்சியிலேயெ அழுகிறார்கள். நிகழ்ச்சி முடிந்தும் அழுகிறாரகள். ஒரே வார்த்தையில ஒஹோன்னு வாழ்க்கை என்று பூட்டான் லாட்டரி மாதிரி விளம்பரம் வேறு. நிகழ்ச்சியில் அழுதது போதாது என்று முடிந்தும் அழுகிறார்கள். இப்படி எளிய குடும்பங்களை தெரிந்தெடுத்துக் கொண்டு வந்து சென்னையில் அழ வைத்தி அல்லது பரிசு கொடுத்து கஷ்டங்களை தீர்ப்பது மாதிரி அசிங்கமான தொழிலை பண்ணி வரும் சன் டி வி யின் முகத்தில் காறிப் துப்புவதாக நினைத்துக் கொண்டு இந்தப் பதிவை இங்கே எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை: