புதன், 7 ஏப்ரல், 2010

தூக்கம் கலையாத பயணி

அவன் காதில் செல்போனை வைத்து
பாட்டையோ பேச்சையோ பிற எதையோ
அவன் தோழி
அவனுக்காக ஒலிபரப்பிய
அந்த முதிர்ந்துவிட்ட வைகறைப்பொழுதில்
தூக்கம் கலையாத பயணிகளோடு
நானுமொருவனாய்
அந்தப் பேருந்து நிறுத்தத்தில்
நின்றிருந்திருந்தேன் என்பதை
இந்தக் கவிதை
அந்த நண்பனிடம் சொல்லி விடுமா?

கருத்துகள் இல்லை: