சனி, 18 மே, 2013

பரமார்த்த குருவின் சீடர்கள்


உனக்கு ஒரு விசயம் நல்லா தெரியும் என்பதற்காகவே அதை மத்த எல்லோரிடமும் எதிர்பார்க்காதே. ஒருத்தருக்க்கு எதோ ஒன்னு தெரியலங்கறதுக்காக அவருக்கு எதுவுமே தெரியாதுன்னும் நினைக்காதே. இவை என் மனைவி சொன்ன பொன்மொழிகள். தற்போது தமிழ் ச்டூடியோ அருண் என்பவரால் அடிக்கடி குறும்படம் இயக்கி பெரும்படம் எடுததவர்கள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்கள். ராமும் இப்படியான ஒரு கருத்தில் இஉர்ப்பதாகவும் அதற்கு அவரின் தனிப்பட்ட மற்றும் திரை வாழ்வின் சறுக்கல்கள் முக்கிய காரணம் எனவும் அபிலாஷ் எழுதியதையும் சமீபத்தில் படித்தேன்.

அருண் சொல்வது இஅவர்கள் எடுப்பது குறும்படமே அல்ல. சினிமாவே அல்ல. இவர்களாஇ சினிமா ரசனை கெட்டு விட்டது என்று. சில மாதங்கள் முன்பு நண்பர் கிருஷ்னராஜுடன் சோழமண்டலம் சென்றிருந்தேன். சில சிற்பங்களும் பல ஓவியங்களுமாக மிக அற்புதமான இடம் அது. எந்தச் சிற்பமும் எந்த ஓவியமும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் இவையெல்லாம் நல்ல படைப்புகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவற்றின் நேர்த்தி சொன்னது.  பெருமைக்காக சொல்லிக்கொள்ளவில்லை. இப்படி பார்த்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. வெறும் கோடுகளின் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்தக் கோஒடுகளில் ஓவியத்தையும் கலையையும் பார்க்கும் கண்கள் இருக்கின்றன. ஆனால் இந்த சினிமாவாதிகள் சினிமாவுக்கு ஒரு ஒஉனிதம் கற்பிக்க முயன்று வருகிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. பொதுவில் மக்கள் பார்க்கவென யாரும் கலைப்படைப்புகளிஅ செய்வதில்லை. தமது உள்ளின் உந்துதல்  காரணமாகவே கலைப்படைப்புகள் நிகழ்கின்றன. எப்படியாப்பட்ட கலையானாலும் இதுதான் அடிப்படை. சினிமாவும் அப்படித்தான். மக்கள் பெரும்பாலான மக்கள் பார்ப்பது சினிமா ஒரு பொழுத்போக்கு என்பதாகத்தான். அதில் உங்களாஅல் ஒரு செய்தி சொல்ல முடிந்தால் ஒரு கலையனுபவம் கொடுக்க முடிந்தால் அது நல்லது. ஆனால் சிலர் வெறும் வணிகமாக அதை பாஅர்க்கிறார்கள். நுகர்வுக் கலாச்சாரத்தில் எதுவுமே வியாபரம் தான்.  சுற்றுச்சூழல் எழுத்துக்கள் குறித்தெல்லாம் காசு வாங்கிக் கொண்டு பயிலரங்கம் நடக்கும் தமிழ்ச்சூலலில் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது. யாரும் யாரின் இடத்தையும் பறித்து விடப்போவது இல்லை.

ஒரு நல்ல படைப்பு என்பது தானாக நிகழ்வது. அதை யாரும் தயாரித்து விட  முடியாது. அப்படியாக நிகழ்ந்த படைப்புகளே சாகாவரம் பெற்றவை. ராமின் செய்யப்பட்ட கற்றது தமிழ் கொண்டாடப்படாதற்கு இதுவே காரணம்.அற்புதமான கலைஞர்கள் யாரும் அங்கீகாரத்துக்காக மெனக்கெட்டதில்லை. அப்படி மெனக்கெடுபவர்கள் நல்ல கலைஞர்களாக இருக்க முடியாது.

சுந்தர் சி பாண்டிராஜ் பிரதாப் போத்தன் சுரேஷ் கிருஷ்னா போன்ற போலிKஅலிடம் பாராட்டுப் பெறவும் மார்க் வாங்கவும் கோமாளி போல யூனிபார்ம் போட்டுக்கொண்டு பவ்யமாக நிற்பதும் அரங்கில் சோக இசைக்கு முகம் கொடுத்தும் படம் செய்பவன் யாரும் சுயமரியாதை உள்ள சுயம் உள்ள கலைஞனாக இருக்கவே முடியாது. அப்படியானவர்கள் யாரும் நல்ல கலைப்படைப்பை தந்து விட முடியாது. அவர்கள் வருவார்கள் போவார்கள். நல்ல படம் எடுக்க அதிகம் திறமை உள்ள ராம் போன்றவர்கள் இது குறித்தெல்லாம் யோசிக்கத்தேவை இல்லை.

எழுதவும் பகிரவும் நிறைய உள்லன. வேறொரு தூக்கம் கெட்ட நாளில் பார்ப்போம்.

பரமார்த்த குருவின் சீடர்கள்


உனக்கு ஒரு விசயம் நல்லா தெரியும் என்பதற்காகவே அதை மத்த எல்லோரிடமும் எதிர்பார்க்காதே. ஒருத்தருக்க்கு எதோ ஒன்னு தெரியலங்கறதுக்காக அவருக்கு எதுவுமே தெரியாதுன்னும் நினைக்காதே. இவை என் மனைவி சொன்ன பொன்மொழிகள். தற்போது தமிழ் ச்டூடியோ அருண் என்பவரால் அடிக்கடி குறும்படம் இயக்கி பெரும்படம் எடுததவர்கள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்கள். ராமும் இப்படியான ஒரு கருத்தில் இஉர்ப்பதாகவும் அதற்கு அவரின் தனிப்பட்ட மற்றும் திரை வாழ்வின் சறுக்கல்கள் முக்கிய காரணம் எனவும் அபிலாஷ் எழுதியதையும் சமீபத்தில் படித்தேன்.

அருண் சொல்வது இஅவர்கள் எடுப்பது குறும்படமே அல்ல. சினிமாவே அல்ல. இவர்களாஇ சினிமா ரசனை கெட்டு விட்டது என்று. சில மாதங்கள் முன்பு நண்பர் கிருஷ்னராஜுடன் சோழமண்டலம் சென்றிருந்தேன். சில சிற்பங்களும் பல ஓவியங்களுமாக மிக அற்புதமான இடம் அது. எந்தச் சிற்பமும் எந்த ஓவியமும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் இவையெல்லாம் நல்ல படைப்புகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவற்றின் நேர்த்தி சொன்னது.  பெருமைக்காக சொல்லிக்கொள்ளவில்லை. இப்படி பார்த்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. வெறும் கோடுகளின் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்தக் கோஒடுகளில் ஓவியத்தையும் கலையையும் பார்க்கும் கண்கள் இருக்கின்றன. ஆனால் இந்த சினிமாவாதிகள் சினிமாவுக்கு ஒரு ஒஉனிதம் கற்பிக்க முயன்று வருகிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. பொதுவில் மக்கள் பார்க்கவென யாரும் கலைப்படைப்புகளிஅ செய்வதில்லை. தமது உள்ளின் உந்துதல்  காரணமாகவே கலைப்படைப்புகள் நிகழ்கின்றன. எப்படியாப்பட்ட கலையானாலும் இதுதான் அடிப்படை. சினிமாவும் அப்படித்தான். மக்கள் பெரும்பாலான மக்கள் பார்ப்பது சினிமா ஒரு பொழுத்போக்கு என்பதாகத்தான். அதில் உங்களாஅல் ஒரு செய்தி சொல்ல முடிந்தால் ஒரு கலையனுபவம் கொடுக்க முடிந்தால் அது நல்லது. ஆனால் சிலர் வெறும் வணிகமாக அதை பாஅர்க்கிறார்கள். நுகர்வுக் கலாச்சாரத்தில் எதுவுமே வியாபரம் தான்.  சுற்றுச்சூழல் எழுத்துக்கள் குறித்தெல்லாம் காசு வாங்கிக் கொண்டு பயிலரங்கம் நடக்கும் தமிழ்ச்சூலலில் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது. யாரும் யாரின் இடத்தையும் பறித்து விடப்போவது இல்லை.

ஒரு நல்ல படைப்பு என்பது தானாக நிகழ்வது. அதை யாரும் தயாரித்து விட  முடியாது. அப்படியாக நிகழ்ந்த படைப்புகளே சாகாவரம் பெற்றவை. ராமின் செய்யப்பட்ட கற்றது தமிழ் கொண்டாடப்படாதற்கு இதுவே காரணம்.அற்புதமான கலைஞர்கள் யாரும் அங்கீகாரத்துக்காக மெனக்கெட்டதில்லை. அப்படி மெனக்கெடுபவர்கள் நல்ல கலைஞர்களாக இருக்க முடியாது.

சுந்தர் சி பாண்டிராஜ் பிரதாப் போத்தன் சுரேஷ் கிருஷ்னா போன்ற போலிKஅலிடம் பாராட்டுப் பெறவும் மார்க் வாங்கவும் கோமாளி போல யூனிபார்ம் போட்டுக்கொண்டு பவ்யமாக நிற்பதும் அரங்கில் சோக இசைக்கு முகம் கொடுத்தும் படம் செய்பவன் யாரும் சுயமரியாதை உள்ள சுயம் உள்ள கலைஞனாக இருக்கவே முடியாது. அப்படியானவர்கள் யாரும் நல்ல கலைப்படைப்பை தந்து விட முடியாது. அவர்கள் வருவார்கள் போவார்கள். நல்ல படம் எடுக்க அதிகம் திறமை உள்ள ராம் போன்றவர்கள் இது குறித்தெல்லாம் யோசிக்கத்தேவை இல்லை.

எழுதவும் பகிரவும் நிறைய உள்லன. வேறொரு தூக்கம் கெட்ட நாளில் பார்ப்போம்.