ஞாயிறு, 18 மே, 2008

நெய்தல் தனி

இந்த பகுதி இனி என் எழுத்துக்களால் நிரம்பும்.நெய்தல் வேறு ஒரு பிளாக் இல் வரும். நண்பர் விக்னேஷ் ராம் அதை விரைவில் செயல்படுத்துவார்.

வெள்ளி, 16 மே, 2008

அந்த பூப்போட்ட கைக்குட்டையை
எனக்கு ஏன் பரிசளித்தாய்
என்று இப்பொது தெரிகிறது.
கண்ணீர் விட வைப்பதென்று
அப்போதே முடிவுசெய்து விட்டாய்.
உனக்குப் பிடித்த
அந்த வெண்னிற மலர்கள்
இங்கேயும் பூத்திருக்கின்றன
என்றுனக்கு நான் சொல்லும் முன்னே
யவை வாடியுதிர்ந்து விட்ட வருத்தத்தை
யாரிடம் நான் பகிர்ந்து கொள்வது?
அந்த மலர்ச்செடிகளைத்தவிர.

புதன், 14 மே, 2008

கிட்டி விளையாடும் ஊர்ப்பையன்கள்

கிரிக்கெட் விளையாடப் போனதிலிருந்து

படித்துறைக்கு குளிக்க வருவதை

குமரிப்பெண்களும் நிறுத்தி விட்டார்கள்

மழைக்குப் பெயர்

நாலைந்து நாட்கள்
விடாது பெய்தால்
மக்களிடம் மழைக்குப் பெயர்
சனியன்

எச்சில்

நீரில்
தலை குனிந்து துப்ப
என் முகத்தில்
எச்சில்

புதன், 7 மே, 2008

அந்தக் குழந்தை


பேருந்தில் இருந்து இறங்கியதும்


இருள் சூழ்ந்த வானத்தில்


என் பயணம்


புலியூர் முருகேசன்



எட்டரை மணி பேருந்தைப் பிடிக்க


இன்னும்


ஐந்து நிமிடங்களே உள்ளதெனெ


மடியிலமர்ந்து சோறூட்டக்கெஞ்சும்


குழந்தைக்கு தெரியாது



ம. ஜெயப்பிரகாஷ்வேல்

நெய்தல் இரண்டு இதழ்கள் வந்து விட்டது.

நெய்தல் இரண்டு இதழ்கள் வந்து விட்டது. மிகப்பெரும் வரவெற்பு ஒன்றும் இல்லை என்றாலும் நன்றாக செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளது.