செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஜான் டேவிட் - இன்னுமொரு ஆயுள்தண்டனை தேவையா?



கடந்த வாரத்தில் இந்த வார ஆரம்பத்தில் ஜான் டேவிட் மறுபடியும் செய்திகளில் அடிபட்ட வண்ணம் உள்ளார். நாவரசு கொலை வழக்கில் ஒரு ஆயுள் தண்டனையை அனுபவித்து விட்டு சில வருடங்கள் வெளியில் முகம் Justify Fullதெரியாமல் சகஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். சமீபத்தில் இவரது இரட்டை ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து மீண்டு செய்திகளில் அடிபட்டார். கரூரில் உள்ள அவரின் சொந்த வீடு காட்டப்பட்டது. அவரின் பெற்றோர் வீட்டைப் பூட்டிச்சென்று விட்டதாக சொன்னார்கள். அவரை வலைவீசி தேடுவதாக சொன்னார்கள். பாஸ்போர்ட் முடக்கம், சொந்த பெயரில் பாஸ்போர்ட் இல்லை என சகட்டு மெனிக்கு தகவல்கள் உலா வந்தன. இப்போது அவர் கடலூர் கோர்ர்டில் சரணடைந்து விட்டார். இதையும் இந்த தின வகையறா தமில் செய்தித்தாள்கள் மிகவும் நாகரீகமற்ற வகையில் செய்திகள் வெளியிடுகின்றன.

படிக்கப் படிக்க கோபம் தான் வந்தது. அவர் வெளி நாட்டுக்கு தப்பியோடி விட்டார் என்றும் பாதிரியாராகி விட்டாரென்றும் பல கதைகள் முன்பு உலவின. ஆனால் அவர் ஜான் மாரிமுத்து என்ற பெயரில் ஒரு BPஓ நிறுவனத்தில் மிகவும் நல்ல விதமாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் நுனி நாக்கு ஆங்கில புலமையை மிகவும் அங்கலாய்ப்போடு தினகரன் நாளிதழ் எழுதியது. அதில் பெண்களை வசியப்படுத்துபவனின் கெடு கட்ட தனத்துக்கு ஒப்பானதொரு தொணிஏ எனக்குத் தெரிந்தது. இந்த மாதிரி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படும் நாளிதழ்களை படிப்போர் நிரைய. அவர்களுக்கு இந்த செய்திகல் தப்பான பிம்பத்தை உருவாக்குகின்ரன. ஜான் டேவிட் வெளியில் வந்து எதாவது சட்டவிரோத மக்கல் விரோத காரியங்களில் ஈடு பட்டு இப்போது மீண்டும் மாட்டிக் கொண்டாலாவது பெசலாம். அவர் பாவம் போல அமைதியாக வேலை தான் பார்த்து வந்துள்ளார். அவரின் ஒரு ஆயுட்கால சிறைவாசம் கண்டிப்பாக அவருக்குப் போதுமானது என்பது என் எண்ணம். திருந்தி வாழ்பரை மறுபடியும் பழைய குற்றத்துக்கக சிறையிலடைப்பது சரியல்ல என்றே படுகிறது. காவிரி தண்ணிக்கும், முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கும் பாலாறு பிரச்சனைகலுக்கும் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யாத தமிலக அரசு ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை எதிர்த்து என்னவெல்லாம் பன்னி வருகிறது. தனி மனிதரான ஜான் டேவிட்டையும் இந்த அரசின் கொடுங்கரங்கள் விட்டு வைக்கவில்லை. ஒரு தலைமுறையையே சிறையில் கழித்து விட்ட நளினி முருகன் பேரறிவாளனெல்லாம் சிறையிலேயே வாடுவதால் இந்த அரசுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? தா கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க முடியாத அரசு இங்கெ ஏன் இப்படி ஆட்டம் போடுகிறது? எனது ஆதங்கத்தை ஒட்டிய வேறு ஒரு பதிவையும் கீழுள்ள இணைப்பில் படியுங்கள்.

ஜான் பாண்டியனும், ஜான் டேவிட்டும்!


திங்கள், 25 ஏப்ரல், 2011

இந்தியாவில் தான் இருக்கிறோமா என்பது சந்தேகமாக உள்ளது


இந்தியாவில் தான் இருக்கிறோமா என்பது சந்தேகமாக உள்ளது. ஆ. ராசா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று சுரேஷ் கல்மாடி கைது. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பெயர் சிபிஐ திங்கள்கிழமை தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. களேபரமாக உள்ளது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாலும் கூட தண்டணை கிடைப்பதும் இவர்கள் ஏற்படுத்திய இழப்புகளை சரி செய்யவும் இவர்கள் திருடியதை மீட்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரிந்தால் தான் இந்த விசயத்தில் உன்மையான திருப்தி ஏற்படும். ஈயப்பானைகளை திருடுகிறவன், குழந்தைகளின் காலிலிருந்து கொலுசுகளைத் திருடுபவல் இவர்கலிடமிருந்தெலாஅம் திருட்டுப் போன பொருட்களை மீட்டு விடும் அரசப்படைகள் இதில் என்ன செய்கிறார்களென்ட்று பார்ப்போம். எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையென்று அலறின. இப்போது எவ்வளவொ நடந்து விட்டது. சும்மா இருக்கிறார்கள். ஆதர்ஷ் குடியிருப்பு ஊழால் அப்படியே இருக்கிறது. மொத்தத்தில் எல்லொரும் சேர்ந்து ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடரின் திரைக்கதை எழுதி வருகிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. இதற்கு இடையில் அன்ன ஹசாரே வேறு காமெடி செய்து ஓய்ந்து விட்டார். ஊழலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிற ஒரு சமூகத்தில் வெறும் அரசியல் வாதிகளை மட்டும் குறை கூறுவதும், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் சரியானவை அல்ல. பிரச்சனை நமது அரசமைப்பில் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும். 49ஓ பற்றி பேசி வருவதை பலரும் ஊக்குவிக்கிற சூழலில் விகிதாச்சார பிரதினிதித்துவத்தை தொட்டும் பேசுவதில்லை. ஓட்டளிக்கும் மக்கள் ஐந்தான்டுகளுக்கு முன்பாகவெ நமது பிரதினிதிகளுக்கான தமது ஆதரவை மறு பரிச்சீலனை செய்யும் வாய்ப்பு வழங்கப் பட வேண்டும். ஒருLKG ழந்தைக்கு கூட ஒரே வருடத்தில் பல பரிட்சைகள் வைத்து பல முறை ரேன்க் கார்டு கொடுத்து கொடுமைப் படுத்தி வரும் நமது சமூகம் மக்கள் பிரதினிதிகளின் செயல்பாடுகலை அலச வாய்ப்பளிக்கப் பட வேண்டும்.

இந்தியாவில் தான் இருக்கிறோமா என்பது சந்தேகமாக உள்ளது

இந்தியாவில் தான் இருக்கிறோமா என்பது சந்தேகமாக உள்ளது. ஆ. ராசா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று சுரேஷ் கல்மாடி கைது. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பெயர் சிபிஐ திங்கள்கிழமை தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. களேபரமாக உள்ளது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாலும் கூட தண்டணை கிடைப்பதும் இவர்கள் ஏற்படுத்திய இழப்புகளை சரி செய்யவும் இவர்கள் திருடியதை மீட்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரிந்தால் தான் இந்த விசயத்தில் உன்மையான திருப்தி ஏற்படும். ஈயப்பானைகளை திருடுகிறவன், குழந்தைகளின் காலிலிருந்து கொலுசுகளைத் திருடுபவல் இவர்கலிடமிருந்தெலாஅம் திருட்டுப் போன பொருட்களை மீட்டு விடும் அரசப்படைகள் இதில் என்ன செய்கிறார்களென்ட்று பார்ப்போம். எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையென்று அலறின. இப்போது எவ்வளவொ நடந்து விட்டது. சும்மா இருக்கிறார்கள். ஆதர்ஷ் குடியிருப்பு ஊழால் அப்படியே இருக்கிறது. மொத்தத்தில் எல்லொரும் சேர்ந்து ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடரின் திரைக்கதை எழுதி வருகிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. இதற்கு இடையில் அன்ன ஹசாரே வேறு காமெடி செய்து ஓய்ந்து விட்டார். ஊழலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிற ஒரு சமூகத்தில் வெறும் அரசியல் வாதிகளை மட்டும் குறை கூறுவதும், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் சரியானவை அல்ல. பிரச்சனை நமது அரசமைப்பில் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும். 49ஓ பற்றி பேசி வருவதை பலரும் ஊக்குவிக்கிற சூழலில் விகிதாச்சார பிரதினிதித்துவத்தை தொட்டும் பேசுவதில்லை. ஓட்டளிக்கும் மக்கள் ஐந்தான்டுகளுக்கு முன்பாகவெ நமது பிரதினிதிகளுக்கான தமது ஆதரவை மறு பரிச்சீலனை செய்யும் வாய்ப்பு வழங்கப் பட வேண்டும். ஒருLKG ழந்தைக்கு கூட ஒரே வருடத்தில் பல பரிட்சைகள் வைத்து பல முறை ரேன்க் கார்டு கொடுத்து கொடுமைப் படுத்தி வரும் நமது சமூகம் மக்கள் பிரதினிதிகளின் செயல்பாடுகலை அலச வாய்ப்பளிக்கப் பட வேண்டும்.

வியாழன், 14 ஏப்ரல், 2011

மிகவும் நேர்மையான தேர்தல் போன்றே தோற்றமளிக்கிறது

தேர்தல் ஆணையம் தன்னை மிகவும் கடுமையானதாகவும் தனித்த சார்பற்ற நடு நிலைமை மிக்கதாயும் தோற்றம் காட்டியிருக்கும் இந்த தேர்தலை நான் மிகவும் சந்தேகத்துடனே பார்க்கிறேன். வெளிப்படையாகப் பார்க்கும் போது மிகவும் நேர்மையான தேர்தல் போன்றே தோற்றமளிக்கிறது. அதுதான் என்னை பெரிய சந்தேகம் கொள்ள வைக்கிறது. எப்படி நமது அதிகாரிகள் இவ்வளவு நாள் இல்லாமல் இப்படி கடமையுணர்வு பெற்றார்கள் என்று. வியாபாரிகள் வழக்கமாக கொண்டு செல்லும் கறுப்பு பணமெல்லாம் இந்தக் களேபரத்தில் சிக்கிக் கொண்டது.

காவல் துறை கூட மிகவும் கடமையுணர்வோடு செயல் பட்டதைப் பார்த்தேன். வாக்குப் பதிவு அலுவலர்கள் மிகவும் கவனத்துடன் எச்சரிக்கையுடன் செயல்பட்டார்கள். நிறைய பேருக்கு விருப்பமே இல்லாமல் கட்டாயமாக பணி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததாக அறிந்தேன். வெறு வழியில்லை. அதை அவர்கள் செய்தே ஆகவேண்டும். வேலை கடினம் கவனம் பிசகினால் பெருத்த பிரச்சனை போன்றவறால் பணம் வந்த போதும் பல ஆசிரியர்கள் இந்த பணியை விரும்பவில்லை.

இந்த தேர்தலில் மிகவும் நல்ல அம்சமாக நான் பார்த்தது, அடையாள அட்டை போலவே பூத் சிலிப்பை வீட்டுக்கே வந்து கொடுத்தது. அதனால் தான் இந்த முறை வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது. நிறைய இடங்களில் வாக்குப் பதிவும் மிகவும் தாமதப் பட்டது. அதிகாரிகளின் எல்லை மீறிய எச்சரிக்கை உணர்வு மிகவும் தாமதப் படுத்தியது. மக்கள் நெடுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. நான் இரண்டு மணி நேரம் காத்திருந்து வாக்களித்தேன்.

பிரச்சாரம் பற்றிச் சொல்ல வேண்டும். மிகவும் மந்தமாக மக்களுக்கு தொல்லை த்ராத பிரச்சாரமாக இருந்தது. எனது தொகுதியில் (முசிரி) அதிமுக வெற்றி பெற்றுவிடும் என்ற பரவலான பேச்சின் காரணமாகவோ என்னவோ ஊருக்குள் ஒரே ஒரு நாள் மட்டும் (மூன்று நாட்களில்) அதிமுக பிரச்சார வாகனம் மட்டும் வந்தது. காங்கிரசின் வண்டியோ ஆதரவாளர்களோ காணோம். பிஜேபி ஒரு நாள் வந்தது. மிகவும் ஆச்சர்யமாகப் போனது. பிஜேபி யிலும் வேலை செய்ய ஆட்கள் எனது தொகுதியில் இருப்பது ஒரு வருத்தத்துக்குரிய செய்தி. மொத்தத்தல் நண்பர் முத்தெழிலன் சொன்னது மாதிரி இந்த முறை பிஜேபி அதிக வாக்குகள் பெறக்கூடும் என்றே தோன்றுகிறது. திமுக அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக விற்கு வாக்களித்தவர்கள் நிறைய பேர் இந்த முறை இந்திய ஜனநாயகக் கட்சியையும் பிஜேபி யையும் கவனத்தில் கொண்டார்கள். இரண்டுமே வருத்ததுக்குரிய தேர்வுகள்.

மதிமுக தனித்து போட்டியிட்டிருந்தால் இந்த இரு கட்சிகளும் தேர்வில் இருந்திருக்காது. எப்போதும் மிகச் சரியாக தப்பான முடிவுகளை எடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற வைக்கோ இந்த முறையும் தன்னை சரியாக அடையாளம் காட்டிக் கொண்டார். நதி நீர் பற்றிய பிரச்சனைகளில் எந்தக் கருத்தையும் கொண்டிராத திமுக அதிமுகவுக்கு மாற்றாக உண்மையில் முல்லைப் பெரியாறுக்காக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த வைக்கோ இந்த தேர்தலில் போடியிட்டு இருக்கலாம். செலவு செய்ய ஆட்களும் பணமும் இல்லை போலும்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத ஒப்பேற்றல்களை கண்டிக்கிறேன்

உங்கள் காலம் முடிந்து விட்டது காந்தியவாதிகளே!. நாட்டு மக்களுக்கான முதல் படுகுழியை வெட்டியவர்களே நீங்கள்தான். மக்களை மாயக்கவர்ச்சிக்கு இரையாக்கும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத ஒப்பேற்றல்களை கண்டிக்கிறேன். உண்மையின் சுவையை அறியவிடாமல் தடுப்பவர்களை மக்கள் கண்டு கொள்வார்களாக.

புதன், 6 ஏப்ரல், 2011

நின்று வாழும் தமிழ்க்குடி

சாலையின் புறத்தில் சரிந்து விழுந்திருக்கும்

இருசக்கர வாகனத்தின் அடியில் மாட்டிக் கொண்டு-

வேதனையைக் கதறும் சிறுபிள்ளையின் குரலுக்கு,

மாநகரப் பேருந்தை நிறுத்தி

குழந்தைக்கு உதவ

ஆட்களைப் பணித்த

அந்த ஓட்டுனரைப் போல-

இன்னும் சிலர் இருப்பதால்

தமிழ்க்குடி நின்று வாழும்;

இன்னும் சில நூறாண்டுகள்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

மிஸ்பா- ஒரு சாமுராய்


கடந்த சில நாட்களாக எழுதுகிற மன நிலையில் இல்லை. இருந்தாலும் இந்த சில நாட்களில் நான் எழுத வேண்டும் என்று நினைத்த இரு விசயங்களை மிகச் சுருக்கமாக எழுதுகிறேன்.

1. வைகோ என்ற மனிதருக்கு நடந்த நம்பிக்கை துரோகம்

இதை உண்மையில் நம்பிக்கை துரோகம் என்பதா வேறு எதாவது உளரசியல் நலன்கலை முன்வைத்து இப்படி ஒதுங்கிக் கொண்டார்களா அல்லது ஒதுக்கப் பட்டார்களா என்று மிகச் சரியாக விளங்கவில்லை. ஒரு சாதாரண அரசியல் ஆர்வலனின் பார்வையில் இந்த விசயத்தில் வைகோவுக்காக என் வருத்தங்களைத் தெரிவிக்கவே விரும்புகிறேன். வைகோவும் தவறுகளும் துரோகங்களும் செய்தவர்தான். ஆனால் ஒரு தலைவர் என்கிற வகையில் தமிழகத்தின் இரண்டு தலையாய தலைவலிகளுக்கு அடுத்தது மக்களில் பொதுவானவர்களும் ஒத்துக் கொள்ளும் தலைவர் வைகோ. அப்படிப்ப்ட்ட வைகோ தன்னால் எந்த அளவுக்கு தவறான முடிவுகள் எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு எடுத்தாலும் அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு சில மக்கள் போராட்டங்களையும் சில மக்களுக்கான போராட்டங்களையும் செய்தவர் வைகோ. தோல்வியே பிரதானமாக இருந்த போதிலும் தனக்கென தொண்டர்களைக் கொண்ட ஒரே கட்சி மதிமுக தான். அது போக தமிழர்களின் வரலாற்றுக் கடமையான தமிழீழப் போராட்டங்களை ஆதரித்தவரும் (விமர்சனங்கள் நிறைய உண்டு) அந்த கடமையின் நடமாடும் வடிவமாக தன்ன்னை முன்னிறுத்தி தமிழகத்தில் அந்த கடமையை உயிர்ப்போடு வைத்திருப்பவருமான வைகோவின் தோல்விகள் அவருக்கு மட்டும் அல்ல. தமிழக மக்கள் எல்லோருக்கும் அந்த துயரத்தில் பங்கு உண்டு.

2. மிஸ்பா உல் ஹக் எனும் சுத்த வீரனின் ஆட்டம்.

இந்த வருட கிரிக்கெட் உல்கக் கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் என்று எழுதி இருந்தேன். அதை நான் விரும்பவும் செய்தேன். ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா ஓரளவு சிறப்பாக விளையாடியதாலும் சில பாகிஸ்தானிய பேட்ஸ்மேன்களின் பொறுப்பின்மையாலும் தோற்று விட்டது. இப்போதெல்லாம் வெகு அரிதாகத்தான் கிரிக்கெட் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த குறிப்பிட்ட போட்டி மறக்க முடியாத போட்டியாகி விட்டது. காரணம் மிஸ்பா உல் ஹக். ஒரு பெரிய தேசத்தின் மிகப்பெரும் மக்கள் திரள் நடுவே ஒற்றை ஆளாக எதிரில் இருக்கும் ஆட்டக்காரனையும் தவிர்த்து தனியொருவனாக ஒட்டு மொத்த இந்திய அணியினருக்கும் இந்திய அணியின் ரசிகர்களுக்கும் 49.2 ஓவர் வரை கிலி கிலப்பிய மிஸ்பா உல் ஹக் ஒரு மாவீரன் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த கடைசி ஜாஹிர்கான் ஓவரில் முதல் இரண்டு பந்துகள் ரண்களாக போகாத பின்பு தான் இந்தியர்கள் வெற்றிக் கூச்சல் போட்டார்கள். வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அதற்கு முந்தைய ஓவர்களில் மிஸ்பாவின் உறுதியைப் பார்த்த மொஹாலி ஸ்டேடிய மக்கள் வாயடைத்துப் போய் தான் இருந்தார்கள். கடைசியாக உமர் குல் இருக்கும் வரை கூட இந்தியா ஜெயித்து விடும் என்று யாருக்கும் நம்பிக்கை இல்லை. காரணம் மிஸ்பா. அந்த கடைசி ஓவரில் எல்லொருக்கும் எழுந்த பயமே மிஸ்பாவின் துணிவுக்கும் திறமைக்கும் சான்று. என்னவொரு உறுதி. ஜெயிப்பதற்கு வழியே இல்லை. எதிரணியினர் பதினோரு பேர் மட்டும் அல்ல. மொத்த மொஹாலி ஸ்டேடியமும் இந்திய அணிதான் என்ற நிலை. இப்படி இருந்தாலும் அணியின் வெற்றிக்காக இறுதி வரை தளராமல் போராடிய மிஸ்பாவுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்படாவிட்டாலும் அந்த ஆட்டத்தின் நாயகன் இதே நிலமையில் தோல்வி உறுதி செய்யப்பட்ட நிலையில் தனியாக ஆடிக் கொண்டிருந்த சேவாக் எப்படி பயந்து அடி வாங்கி ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டார் என்பதை முன்பு பார்த்திருக்கிறேன்.

மிஸ்பா- ஒரு சாமுராய்.