வியாழன், 23 டிசம்பர், 2010

எம். சி. ராஜா விடுதி மாணவர்கள் அண்ணா சாலையில் மறியல்

நேற்று சைதாப்பேட்டை எம். சி. ராஜா விடுதி மாணவர்கள் அண்ணா சாலையில் மறியல் செய்திருக்கிறார்கள்.அந்த மாணவர்களின் சாலை மறியல் வேறு வழியே இல்லாமல் நடந்தது. முன்னர் வைத்த வேண்டுகோள்களுக்கு செவி சாய்த்திருந்தால் இப்படி ஆகி இருக்காது. அந்த விடுதிகுள் ஒரே ஒரு நாள் போய் வாருங்கள். அவர்களின் அவலம் புரியும். அவர்கள் சாப்பிடும் சாப்பாடு எப்படி என்று பாருங்கள். வெறுத்துப் போவீர்கள். அங்கு படிக்கிற மாணவர்கள் என்றில்லை யாராரொவும் வந்து போகவும் தங்கவும் செய்கிறார்கள். இதுமாதிரியான சாலை மறியல்கள் நடக்கும் போது மக்கள் மறியல் பாண்ணுபவர்கள் மேல் வருத்தம் கொள்கிறார்கள். அவர்களின் நியாத்துக்கு துணை நிற்காவிட்டாலும் குறை சொல்லாமல் இருக்கலாம். ஒரு முறை வேளச்செரியில் இதே போல சாலைமறியல். எதோ நிவாரண நிதி கிடைக்காத மக்கள் கவுன்சிலரிடம் போக அவர் மிரட்டி அனுப்பி இருக்கிறார். அபுறம் மக்கள் வேறென்ன செய்வார்கள்? அரசியல் கட்சிகளின் போராட்டம் என்றால் ஒதுங்கிப் போகும் மக்கள் மக்கள் போராட்டம் என்றால் புலம்பவும் சிலர் அவர்களிடமே போய் ஏன் எங்கள் நேரத்தை வீண் செய்ட்கிறீர்கள் என்வும் கேட்கிறார்கள். மறியல் போராட்டங்களின் போது பொதுமக்கள் பாதிக்கப்பட்ட தரப்புக்கு ஆதரவாகவும் நிற்க வேண்டாம். அவர்களின் போராட்டத்தை சகித்துக் கொண்டால் போதும்.உங்களுக்கும் ஒரு நாள் இந்த மாதிரி மறியலில் ஈடுபடும் நிலை வரலாம்.
http://www.facebook.com/note.php?note_id=165774453465976&id=545231892
விடுதியின் சில படங்கள் இந்த இணைப்பில் காணலாம்.

http://timesofindia.indiatimes.com/city/chennai/1000-students-crammed-into-52-rooms/articleshow/7147814.cms
செய்தியின் இணைப்பு இது.

கருத்துகள் இல்லை: