புதன், 30 ஜூன், 2010

நீதி வெல்லட்டும்

இன்று நீதிபதி கே சந்துரு பிறப்பித்த ஒரு உத்தரவு என்னை மிகவும் மகிழ வைத்தது. தமிழருவி மணியனை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் இருந்து வெளியேறும்படி அந்த வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கெதிராக தமிழருவி மணியன் தொடுத்த வழக்கில் தான் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என்ற ஒரு சப்பைக்காரணத்தை காட்டி வீட்டுவசதி வாரியம் அவரை வெளியேறச்சொல்லி இருக்கிறது. வீட்டுவசதி வாரியத்தின் நிர்வாக கட்டடத்தில் தமிழ் வாழ்க என்ற வாழ்த்து உள்ளதை சரியாக சுட்டிக்காட்டிய நீதிபதி தமிழறிஞர்களை மதித்தால்தான் தமிழ் வளரும் என்றும் அரசுக்கு எதிராக எழுதினாரென்பதற்காக அவரை பழிவாங்கும் இந்தப் போக்கைக் கண்டித்திருக்கிறார். நாறபது வருட பொதுவாழ்வின் பின்னரும் சொந்த வீடு இல்லாத மணியன் மாதிரியான ஆர்வலர்களை அரசு அரவணைக்க வேண்டும் என்றார். மேலும் அரசிடம் கொள்கை மாறுபாடு உள்ளவர்களை இந்தமாதிரி நெருக்கடி தருவதையும் கண்டித்தார். இப்படி சில தீர்ப்புகளை பார்க்கிற போதுதான் ஏன் மக்கள் இன்னமும் நீதிமன்றங்களை தேடிப்போகிறார்கள் என்று புரிந்தது. ஒரே நாளில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த விரைவான நீதிபதியாகவும் நீதிபதி சந்துரு இருக்கிறார். இப்படியான ஒருவர் நாம் வாழும் இந்த நெருக்கடியான காலத்தில் இருப்பது மிகவும் ஆறுதலான ஒன்றாகும். நீதி வெல்லட்டும்.

கருத்துகள் இல்லை: