சனி, 5 ஜூன், 2010

நெடுந்தொலைவு போகிற
சொகுசுப்பேருந்தினில்
நள்ளிரவுக்குப் பின்னிரவில்
விழித்துப் பார்த்த போது-
உறங்கும் முன் யாருமற்றிருந்த
பக்கத்து இருக்கையில்
விருப்பமானதொரு பரிசினைப்போல
ஒருக்களித்துப் படுத்தவாறு
உறங்கிக்கொண்டிருந்தான் சிறுவனொருவன்.

சாளரக்காற்றை
அவனுக்குத் தோதாக
ஒப்புரவு செய்து விட்டு
நானுமந்த
உறங்குகிற பரிசைப்போல-
ஒருக்களித்துப் படுத்துக் கொண்டேன்.

கருத்துகள் இல்லை: