வெள்ளி, 26 டிசம்பர், 2008

அவனை குற்றம் காண்பதை விடுத்து அவன் தொட்ட விஷயங்களின் இன்றைய தேவை காணுங்கள். யாரும் பெண்களை பொருட்டாக மதிக்காத காலத்தில் பெண்களை போற்றினான். ஜாதி அமைப்புக்குள்ளே இருந்து கொண்டே சாதியக் கொடுமைகள் வேண்டாம் என்றான். சாமான்யனுக்கும் விடுதலை உணர்வை உட்டினான். இந்திய தேசியத்தில் நம்பிக்கை வைத்தான். தமிழை நேசித்தான். அதனால் தாழ்வுற்று வாழ தலைப்பட்டான். நீங்கள் சொல்வது போல அவன் ஆர்ய ரத்தம் அவனை அர்யத்தின் வீர்யம் பாட வைத்து இருக்கலாம். ஆனால் அவன் தமிழ் மனம் தமிழை தமிழரை தமிழ்நாட்டை நேசித்தது. யாதும் உரே யாவரும் கேளிர் என்பது தமிழ் பண்பாடு எனில் காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்என்ன பண்பாடு அய்யா? அன்பென்று முரசை கொட்டியவன். தகரென்று கொட்டு முரசே பொய்மை சாதி வகுப்பினை எல்லாம். அன்பென்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பெரும் நிகராம். இதை பாடியவன் யார் அய்யா? பி ஜெ பி காரனா?செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தென் வந்து பாயுது காதினிலே என்றவன் ஆரிய தேசப் பிரதிநிதியா?யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதா வதெங்கும் காணோம் என்றவன் சமஸ்கிருத சழக்கனா? பெண்ணறிவை வளர்த்தால் வையம் பேதைமை யற்றிடுங் காணீர் என்றவன் பெண்ணடிமை பேசியவனா? மனிதரில் ஆயிரம் சாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை நந்தனை போல் ஒரு பார்பான் இந்த நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின் எந்த குலத்தினரேனும் உணர்வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம் சூத்திரனுக்கொரு நீதி தண்ட சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதியென்று காண்போம் இதெல்லாம் சொன்னவன் வர்ணாசிரம ஆதரவாளனா? நன்று புராணங்கள் பல செய்தார் அதில் நல்ல கவிதைகள் பல தந்தார் கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் காண்போம் என்றவன் பழைய பஞ்சாங்கமா? அப்படித்தான் என்றால் உங்கள் தரப்பில் இருந்து ஒரு ஆளையோ குறைந்தது ஒரு பாடலையோ வரிகளையோ முற்போக்கான பாரதியின் சம காலத்திய ஒரு ஆளின் படைப்பை காட்டுங்கள். அவன் காலத்தில் வேறு யாரும் இல்லை என்று இதன் பொருள் அல்ல. அவன் காலத்தில் இது குறித்து பேச யாரும் துணியவில்லை. பேசாப் பொருளை பேசத் துணிந்தான் கேளா வசைக்கெல்லாம் தயாராய் இருந்தான். பாரதி புரட்சி பண்ணியவனள்ள.
புரட்சிக்கான மனமாற்றத்தை ஏற்படுத்தியவன் புரட்சிக்கு மக்களை தயார் படுத்தியவன்அதை தவற விட்டு இன்று அவனை தண்டிக்க கோல் எடுத்து உள்ளோம் . எல்லோரும் ஒன்றென சொன்னவன். உங்களையும் இன்றிருந்தால் நன்பாவென்ரிருப்பன். தை தவற விட்டவர்கள் நாம் இப்போது அவனை தண்டித்துக் கொண்டு உள்ளோம்.

பாரதி ஒரு மகாகவிபாரதி ஒரு மகாமனிதன் பாரதி ஒரு மண்ணுலக உயிர்களின் காதலன் பாரதி வேண்டியது சமுக மாற்றம்


பாரதியின் பார்ப்பனத்தனம் மறுக்கக் குடியது அல்ல. என்றாலும் அந்த காரணத்திற்காக அவர் தவிர்கக் குடியவர் அல்ல. தனது வழ்காலத்தில் மற்றவர்கள் பேச துணியாத பெரிய பொருள்களை பேசியவன். அவன் கவிதைகள் நிறைய உண்டு நண்பரே. அதை எல்லாம் மொத்தமாக நடிப்பு என்று விமர்சனம் வைத்தவர்கள் இங்கே நிறைய. அவன் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தான் வாழ்ந்த காலத்தை கடந்து யோசித்தவன் அவன். அவனின் பார்ப்பனத்தன்மையை அவன் மாற்ற விரும்பிய வேண்டி அவன் கடவுள்களிடம் கேட்ட பாடல்களின் வரிகள் சிலவற்றை முன்பே பதிந்து உள்ளேன். அந்த பாடல்களை படித்து இது வரை யாரும் அது குறித்து எழுதவில்லை.மீண்டும் எழுதுகிறேன். பாரதி ஒரு முற்றுப் பெறாத சகாப்தம். பாரதி ஒரு பாரதி அல்ல. உங்களுக்கு பிடித்தமான பாரதியை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்கிற பார்ப்பன பாரதியை பார்ப்பனர்களே எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் இந்தி ஒற்றைப் பார்வை. பாரதியை பார்ப்பனத்தன்மைக்காக எதிர்த்தே தீருவது என்றால் அதை அவன் வாழ்ந்த காலத்தில் செய்வது தான் சரி. இப்போது செய்து பலனில்லை. பெரியார் பார்ப்பனர்களை துரத்தி அடித்தார். மீதம் கொஞ்சம் பேரை திராவிட இயக்கங்கள் அடித்தன. இப்போது மீந்து இருப்பவர்கள் கொஞ்ச நஞ்சம்.

பாரதியும் பெரியாரும் ஒரே தடத்தில் நிற்க குடியவர்கள் அல்ல. பாரதி ஒரு படைப்பாளி. பெரியார் ஒரு போராளி. இது எனது புரிதல். அதற்காக பாரதி மட்டம் அல்ல. ஒரு ஒப்பீட்டு நோக்கில் படைப்பாளி பாரதி போராளி பாரதியை விடவும் மேலானவன். பெரியாருக்கு இருந்த அரசியல் ஆதரவு அவரின் குடும்ப பின்னணி அவர் வாழ்ந்த சமுகம் வேறு. அதற்கு முன்பான இருண்ட தமிழகத்தில் தோன்றிய வெள்ளி பாரதி. அந்த வெளிச்சம் பெரியார் மேலும் பட்டது என்பதை மறுக்க முடியாது. பெரியார் ஒரு போராளி. அவன் போராடிய விசயங்களை அவருக்கு முன்னதாக தொட்டுஸ் சென்றவர் பாரதி. அதனால் அவரை முன்னோடி என்கிறேன். பெரியாரின் போராட்ட்டங்களை சற்றும் குறைத்து மதிப்பிடாத அதே வேளை பாரதியின் முன்னோடித்தன்மை சுட்டிக் காட்ட வேண்டியது என் மனதிற்கு மிக விருப்பமான ஒன்று.
பாரதியின் பார்ப்பனத்தனம் மறுக்கக் குடியது அல்ல. என்றாலும் அந்த காரணத்திற்காக அவர் தவிர்கக் குடியவர் அல்ல. தனது வழ்காலத்தில் மற்றவர்கள் பேச துணியாத பெரிய பொருள்களை பேசியவன். அவன் கவிதைகள் நிறைய உண்டு நண்பரே. அதை எல்லாம் மொத்தமாக நடிப்பு என்று விமர்சனம் வைத்தவர்கள் இங்கே நிறைய. அவன் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தான் வாழ்ந்த காலத்தை கடந்து யோசித்தவன் அவன். அவனின் பார்ப்பனத்தன்மையை அவன் மாற்ற விரும்பிய வேண்டி அவன் கடவுள்களிடம் கேட்ட பாடல்களின் வரிகள் சிலவற்றை முன்பே பதிந்து உள்ளேன். அந்த பாடல்களை படித்து இது வரை யாரும் அது குறித்து எழுதவில்லை.மீண்டும் எழுதுகிறேன். பாரதி ஒரு முற்றுப் பெறாத சகாப்தம். பாரதி ஒரு பாரதி அல்ல. உங்களுக்கு பிடித்தமான பாரதியை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்கிற பார்ப்பன பாரதியை பார்ப்பனர்களே எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் இந்தி ஒற்றைப் பார்வை. பாரதியை பார்ப்பனத்தன்மைக்காக எதிர்த்தே தீருவது என்றால் அதை அவன் வாழ்ந்த காலத்தில் செய்வது தான் சரி. இப்போது செய்து பலனில்லை. பெரியார் பார்ப்பனர்களை துரத்தி அடித்தார். மீதம் கொஞ்சம் பேரை திராவிட இயக்கங்கள் அடித்தன. இப்போது மீந்து இருப்பவர்கள் கொஞ்ச நஞ்சம்.

பாரதி பலவீனங்கள் அற்றவன் அல்ல. அது போல அவன் ஒரு தவிர்க்கப்பட வேண்டியவனும் அல்ல. யாரும் எழுதாத காலத்தில் யாரும் எழுத நினைக்காததை அவன் எழுதினான். கணந்தோறும் மனிதர்களை உயிர்களை நேசித்தான். யாரோ எழுதினார்கள். காசுக்காக நடித்தான் என்று. அவன் எட்டயபுர சமஸ்தானத்தில் வாங்கிய சம்பளம் 12 ரூபாய். அந்த பெரிய சம்பளத்தை விட்டு அவன் அறையனாவுக்கும் காலனாவுக்கும் அலைந்தான் அய்யா சென்னை இல். அவன் சம்பாதிக்க நினைத்து இருந்தால் அவனின் பல்மொழி அறிவுக்கு அவன் பெரிய அரசாங்க வேலைக்காரன் ஆகி இருக்கலாம் அயா. அதை விடுத்து கடற்கரை குட்டங்களில் மக்களுக்கு விடுதலை பாடல்களை பாடினான்.

இதன் பின்னான என் மற்றைய பதிவுகள் புரட்சிகர நடவடிக்கைகளால் அளிக்கப் பட்டன. அதை பற்றிய ஒரு . இடுகையை விரைவில் காண்பீர்கள்

கருத்துகள் இல்லை: