திங்கள், 29 டிசம்பர், 2008

குற்றம் பார்த்தல்


எதேச்சையாய்
அந்தக் கொலைவாள்
என் கைக்கு கிடைத்தது.

அதன்
கூர்மை…
பளபளப்பு…
கொடுவசீகரம்…
யாவும் பிரமிப்பூட்டின.


மேலும்-
கொஞ்சம் பயமும் கூட;
என் மீது பாய்ந்து விட்டால்…?



எடுத்துச் சுழற்ற ஆரம்பித்தேன்.
எளிதாகத்தான் இருந்தது.


ஒன்று…
இரண்டு…
நூறு…
ஆயிரம்…
நண்பர்கள்…
எதிரிகள்…
யாரெனவும் தெரியாதவர்கள்…

எதிர்ப்பட்ட தலைகள்
யாவும் வீழ்ந்தன.


கைப்பிடியைத் தளர்த்தாத வரை
வாளின் கூர்முனை
என் தலைக்கு திரும்பாது.

கருத்துகள் இல்லை: