வெள்ளி, 26 டிசம்பர், 2008

பாரதிக்கு யாரும் மகாகவி பட்டம் காமராஜர் அரங்கில் விழா எடுத்து கொடுக்கவில்லை. மேலாக பாரதியே தன்னை பல இடங்களில் பல தருணங்களில் மகாகவி என்று ஒப்புக் கொண்டு உள்ளான். அப்படி ஒப்புக் கொள்ள அறிவித்துக் கொள்ள மகா நேர்மையும் தைரியமும் தன் அறிவுத் தெளிவில் அசாத்திய நம்பிக்கையும் வேண்டும். கவியரசு என்பதை எதிர்த்தால் கவிப்பேரரசு ஆக்கிக் கொள்ளும் உத்தி அல்ல அது. அது ஒரு உண்மையான படைப்பாளியின் கர்வம். மீண்டும் அப்படி யாரவது பாராது காலத்தில் இருந்தால் சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறோம். பார்ப்பான் என்கிற காரணத்துக்காக அல்ல. தான் வாழ்ந்த காலத்தை முன்னெடுத்து செல்கிற ஒருவனை மகாகவி என்ன்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லலாம். பாரதியின் கவித்வமும் அவன் எளிமைப்படுத்திய செழுமைப்படுத்திய தமிழும் அவன் பத்திரிகையில் இயங்கிய பல தளங்களும் அவனின் குறைந்த வாழ்நாளுக்குள் அவன் தொட்ட விசயங்களும் அவனை மகாகவி ஆக்கின. அவன் மகாகவியாகவே பிறந்தான் (இதை வெறும் பிறப்பு என்கிற நிகழ்வாக கொள்ளவும் . நான் அந்த அர்த்தத்தில் எழுதுகிறேன். பதிலுக்கு அப்போ வேற ஜாதியில் மகாகவிகல் பிறக்க முடியாதா என்று கேட்டு வைக்காதீர்கள். ) அவனுக்கு வெள்ளையர்கள் வைஸ்ராய் பதவி கொடுத்து இருந்தாலும் அவன் மக்களை பற்றி புலம்பிக்கொண்டு அனாதையாய் தான் செத்திருப்பான்.
பாரதி வாழ்ந்த காலத்திய மற்றவர்களின் எழுத்துகளையும் பாரதியின் எழுத்துக்களையும் ஒப்பிடுங்கள். படைப்பு உள்ளடக்கம் பற்றி எழுதும் முன் கவிதை என்ற வடிவை இதற்கு முன் அல்லது அவனுக்கு முன் யார் இவ்வளவு எளிமைபடுத்தியது?பாரதிதாசன் தமிழ் தமிழ் என்றார் என்றால் அவர் காலத்தில் திராவிட இயக்க சிந்தனைகள் வளர ஆரம்பித்தன. பாரதி காலத்தில் தேசம் மொத்தமும் விடுதலைக்கான இயக்கம் நடை பெற்றது. தமிழின் பெருமையை எடுத்துரைத்து நீராரும் கடலுடுத்த எழுதினால் தான் மகாகவி பட்டம் வழஅங்குவீர்களா?திராவிட இனம் தமிழர் தெலுங்கர் கன்னடர் என கருத்த தோலுடன் உதடுகள் பெருத்த நாம் எப்போது இந்த நிலப்பரப்பில் விரவ ஆரம்பித்தோம்? என்று நீங்கள் நினைகிறீர்கள்? உண்மையில் இந் மண்ணின் ஆதிகுடிகள் ஒரிசாவின் காடுகளிலும் மேற்குதொடர்ச்சி மலைகளிலும் வாழ்கின்றனர். ஆரியம் திராவிடம் எல்லாம் வந்தது தான். அதை பேசி இனி ஆகா வேண்டியது இல்லை. இப்போதைய சமூக அமைப்பை படிப்போம். அதுவே நல்லது.

பாரதி என்றில்லை. பொதுவில் வரும் யாரும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. பாரதிக்காக யாருன் வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எங்கே ஒரு தவறான கருத்து முன்மொழியப் படுகிறதோ அங்கே தெரிந்த ஒருவன் அமைதியாய் இருத்தல் சமுக துரோகம். அதை செய்ய நான் தயாராக இல்லை. உங்கள் கண்ணோட்டத்தில் உங்களது சரி. எனது கண்ணோட்டத்தில் எனது கருத்து சரி. ஆனால் நாம் இருவரும் விவாதிப்பதன் முலம் பொதுவிலான உண்மையை கண்டடைய சாத்தியம் உள்ளது. அதை ஏற்றுக் கொள்ள தயங்குபவர்கள் விரோதமான மறுமொழி பேசி எதிர்கருத்தை முடக்கும் போக்கு சகஜமானது. அதையும் தாண்டி உணமையை நிலை நிறுத்த போராடுவோம்.

பாரதியை இந்து அமைப்புகள் கொண்டாடுகின்றன. போலி கம்யுனிஸ்டுகள் கொண்டாடுகிர்ரர்கள். இன்னும் யாரெல்லாமோ கொண்டாடுகிறார்கள். இதெல்லாம் மிக சமீபத்திய நிகழ்வுகள். இதற்கும் பாரதிக்கும் சம்பந்தமில்லை. காமராஜரை நாடார்கள் எடுத்துக் கொண்டது போல.வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை பிள்ளைகள் எடுத்துக்கொண்டது போல.


புரட்சி என்ற வார்த்தை பாதி இல்லையேல் தமிழுக்கு இல்லை. அப்படியிருந்தால் இப்போது புரட்சிக்கு என்ன வார்த்தை கொடுத்து இருப்பார்கள்? அது போகட்டும். ஆரியம் சமஸ்கிருதம் எல்லாம் துக்கிப்பிடித்தார் என்றே இருக்கட்டும். தமிழை தரையில் போட்டா அயா மிதித்தார்?அவனுக்கு முன்பாக அல்லது அவன் காலத்திலோ தமிழை அவனளவு உயர்த்தி பிடித்தது யார் அய்யா? தமிழன் என்ன அவன் நடித்த சினிமா படத்தை பார்க்க வேண்டி அவசியம் இருந்ததா? அவன் தமிழ் பெயர் சொல்லி நாடகம் ஆட?அல்லது கல்யாண மண்டபம் வைத்து இருந்தானா அதைக் காக்க தமிழன் என்று சொல்லடா தலை நிமர்ந்து நில்லடா என்று சொல்ல.பாரதி எட்டயபுர சமஸ்தான கவிஞராய் இருந்த பொது சம்பளம் 12 ரூபாய். அதை விடுத்து அவன் சுதேசமித்ரனில் இந்தியா இதழில் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட அந்த பயித்தக்காரனை எது அய்யா துரத்தியது? தமிழை தலை மேல் வைத்த அவன் பாடல்கள் கொஞ்சத்தை http://www.tamilnation.org/literature/bharathy/kavithaikal/thesiya2.htm இல் போய் படியுங்கள். . உழைக்கும் மக்களை பாரதி கண்ணால் kuda கண்டதில்லை அய்யா. அவன் அரண்மனை சொகுசு வாழ்விலே லயித்திருந்தவன். சம்பாதிக்க தமிழை எடுத்தானே அவனை ---------

கருத்துகள் இல்லை: