வியாழன், 16 அக்டோபர், 2008

தமிழ் ஈழம் என்கிற ஊறுகாய்

எப்போதெல்லாம் இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கிறதோ அப்ப்போதெல்லாம் தமிழக அரசியல் களம் பரபரப்பாகும். வீரப்பன் ஆள் கடத்திய போதெல்லாம் "புலனாய்வு" பத்திரிக்கைகள் காட்டிய பரபரப்புக்கு சற்றும் குறையாதது இந்த பரபரப்பு. யார் உண்மையான தமிழ்ரத்தம் என இப்போது உரசிப்பார்த்துக்கொள்வார்கள். இது ஒரு சடங்கு போல. தனுஷ்கோடி மணல் திட்டுக்களில் பாலுக்கு இல்லாமல் செத்த குழ்ந்தைகள், கடல்நீரில் மூழ்கிய மக்கள் என இவர்களுக்கு மறந்து போன பலவும் இப்போது நினைவுக்கு வரும். கருணாநிதியும் ஜெயலலிதாவும் நடத்துகிற அறிக்கை போர் புஷ் இன் ஈராக் போரை விடவும் கேவலமானது. திருமாவளவன் மருத்துவர் அய்யா என சகலரும் தற்போது களம் இறங்கி உள்ளார்கள். தமிழ் மக்கள் செத்தால் மட்டும் அல்ல. உலக மக்களில் எந்த இனம் ஒடுக்கப்பட்டாலும் அவர்களுக்காக உண்மையில் கசிகிற மனத்தோடு நாம் செய்யும் சிறு முனுமுனுப்பு அரச பயங்கரவாதிகளை அதிர வைக்கும். மக்கள் மட்டுமே இது போன்ற நேரங்களில் சாதிக்க முடியும். பொதுவாக இது போன்ற சமயங்களில் மக்கள் சக்தியை ஒன்று படுத்துகிற தலைமையை நாம் தமிழ் நாட்டில் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு இன்றைய பொழுது போக ஈழம் ஒரு செய்தி. நெருப்பு சுடுமென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எவ்வளவு சுடுமென்று சுடு படுகிரவனுக்கும் பட்டவனுக்கும் மட்டுமே தெரியும். (நண்பர் ஒருவரின் வார்த்தைகள்.). நமக்கு அவர்களின் வலி தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இவர்களின் போலித்தனம் அறிந்து கொள்கிற அறிவு இருக்கிறது. அறிந்து கொள்வோம். இரண்டு வாரத்தில் யுத்தம் முடிந்து விடும் என்ற தெம்பில் கேடு வைக்கிறார்கள். நாலு மாதம் தானே தேர்தல் வர என தமிழம்மாவும் பொதுவாக அறிவித்து விட்டார். நல்ல கேள்வி ஒன்றும் கேட்டுள்ளார். உங்கள் எம் பி களுக்கு பதிலாக எம் எல் எக்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் என்று. இதற்கு பதில் வராது.

கருத்துகள் இல்லை: