இரண்டு சம்பவங்கள் நமது தமிழக காவல் துறையை தலை குனிய வைத்துள்ளன. பலமுறை குனிந்த தலைதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் குனிய தவறுவதில்லை.
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல். கடலூரில் தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தின் பின்னான கலவரங்கள். முதலாவது காவல் துரையின் கொடூரப் போக்கையும் இரண்டாவது காவல்துறையின் கையாலாகாத தனத்தையும் காட்டுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின் பின்னாலும் ஆல்வோர் இல்லை என சொல்ல முடியுமா?
காவல் துறையை அடியாள் துறையாக மாற்றி வரும் அரசு ஒன்றை மறக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என சொல்ல இவை போதும். இவற்றால் மக்கள் படும் துயரமும் , அவர்கள் கண்ட பீதியும் தேர்தல் நேரங்களில் எதிரொலிக்கும். எதிர்கட்சிகள் இதை நினைவூட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக