செவ்வாய், 21 ஏப்ரல், 2009

சிவானந்தம் இறுதி ஊர்வலம்

கடந்த ஞாயிறு அன்று வேறு ஒரு விவகாரமாக சொந்த ஊருக்கு போய் இருந்தேன். தோழர் சிற்பிமகன் காலையில் அழைத்து சிவானந்தம் இறுதி ஊர்வலம் பற்றி பெசினார்.முதல் நாள் இரவுதான் நிலமை கவலைக்கிடம் என்ற செய்தியுடன் சென்னையில் இருந்து வந்தேன். மாலை ஐந்து மணி அளவில் ஜவஹர் பஜாரில் ஊர்வலத்துடன் இணைந்தேன். புரட்சிகர இளைஞர் முண்ணனி மற்றும் பெண்கள் முன்னணி முன்னெடுத்துச் சென்ற ஊர்வலத்தில் பலவித முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழர் தலைவர் பழ நெடுமாறன் உ தனியரசு மற்றும் சில இயக்கங்களின் தலைவர்களின் இரங்கல் உரைகளுக்கு பின் ரயில் நிலையத்தின் பின்னுள்ள எரிவாயு மயானத்தில் சிதை எரிக்கப் பட்டது.

தாரள மயமாக்கம், ஏகாதிபத்தியம் பொன்ற முழக்கங்கல் எழுப்பப் பட்டது எனக்கு தெவையற்றதாகப் பட்டது. சிற்பிமகனும் வந்தேறிகளே வெளியேறுங்கள் என்ற பொதுவான முழக்கத்திற்காக வருந்தினார்.

இரங்கல் உரையின் போது ஒரு நண்பர் உணர்வு மிகுதியால் சில முழக்கங்களை எழுப்ப நெடுமாறன் அய்யா கடிந்து கொன்டார். கூச்சல் என்று சொன்னதை அந்த தோழர் முழக்கம் என திருத்தினார். ஆனால் நெடுமாறன் இரன்டு பதங்களையும் உபயொகப் படுத்தினார். இதுவும் தேவையற்றது. ஆனால் அவர் விரும்பியது ஒரு கட்டுப் பாடு. சில பேர் சரக்கில் இருந்தனர்.அதுவும் இந்த குழப்படிகளுக்கு காரணம். என்றாலும் இந்த ஊர்வலத்திற்காக வந்த அந்த முன்னூறுக்கும் குறையாத பேர்கள் தமிழுணர்வு உந்திதான் வந்தனர். தள்ளாத வயதினரும் இதில் அட்ங்குவர். இதன் கானொளிகளை நாலை இணைக்கிரேன்.














கருத்துகள் இல்லை: