செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

சுத்தப் படுத்துவதை விடவும் சுத்தமாக வைத்திருப்பது எளிது.

௧1. மக்கள் வேலையை முடித்த பின்பு

௨. .2. பை நிறைய இருப்பது இந்த சமூகத்தின் குப்பைகள் தான்


௩. 3. குப்பை சேகரம்

௪4. இந்த சூரியந்தான் இதெல்லாம் பார்த்து விட்டு நிலவுக்கு தகவல் சொல்லி அனுப்பியது
5. வண்டியில் பொகிற போது கிழக்கு கடற்கரை சாலையில் ஓரிடம்
கடந்த ஞாயிறு சென்னை முதலைப் பண்ணையில் இருந்து சில கி மீ தொலைவு வரை சென்னை டிரெக்கிங் கிளப் (http://www.chennaitrekkers.org/) சார்பாக அந்த நண்பர்களுடன் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிக்காக சென்றேன்.இந்த கிளப் நிறைய சாகசப் பயணங்களை நடத்துகிறது. ஆனால் நான் கலந்து கொல்லும் முதல் நிகழ்வு இது தான். எதற்கு மெனக்கெட்டு அங்கே போய் சுத்தம் செய்ய வேண்டும்? ஆலிவ் ரிட்லீ (http://en.wikipedia.org/wiki/Olive_Ridley) என்ற ரக ஆமை ஒன்று முட்டையிட கிழக்கு கடற்கரையை நாடும் தருணம் இது (http://world-turtle-trust.org/project07.html) . எனவே இந்த சுத்தப் படுத்தும் பணியில் இவர்களும் இன்னும் நிறைய பேரும். முழுதாக எழுத நேரம் வாய்க்காததால் செய்தியை மட்டும் சொல்லி படங்கள் சிலவற்றை இணைத்து உள்ளேன். இதுவும் என் செல்போன் இல் 1.3 மெகா பிக்செல் கேமராவினால் எடுக்கப் பட்டது. மொத்தத்தில் ஒன்று புரிந்தது. சுத்தப் படுத்துவதை விடவும் சுத்தமாக வைத்திருப்பது எளிது. வெறும் 22 பேர்கள் மட்டுமே குரைந்தது இரண்டு கி மீ நீள கடற்கரையை இரண்டு மணி நெரத்தில் சுத்தம் செய்ய முடிகிர பொது நமது அரசியல் கட்சிகள் அவர்களது தொண்டர்களைக் கொண்டு என்னவெல்லாம் செய்துவிடலாம்.?




1 கருத்து:

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

நியாயமான ஆதங்கம்.. தொடர்ந்து எழுதுங்கள் தோழரே..