செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

கோயில் நகரம்

௧. வரதராஜ பெருமாள் கோவில் முகப்பு

௨. ஏகாம்பரநாதர் கோவிலில்

௩. கைலாசநாதர் கோவில் முகப்பு.



௪. கைலாசநாதர் கோவில்


௫. வரதராஜ பெருமாள் கோவில் குளமும் அத்திகிரி பெருமாள் கோவிலும்



௬. ஒரு சுவரில் இருந்த கல்வெட்டு






௭. சுரகறேஷ்வரர் கோவில் : இதன் முஉலவர் சன்னதி வழ்க்கமான சதுர வடிவில் இல்லாமல் வட்ட வடிவில் உள்ளது.








௮. கைலாசநாதர் கோவிலில் இது போல நிறைய சிலைகள் உள்ளன.







௯. கைலாசநாதர் கோயில் பிரகாரம்

இன்று வேலை விசயமாக காஞ்சிபுரம் சென்று இருந்தேன். மதியமே என் வேலை முடிந்து விட்டது. பின் கோப்பெருஞ்சோழன் அண்ணா வந்து காஞ்சிபுரம் முழுக்க தனது ராயல் என்பீல்ட் இல் கூட்டிக் கொண்டு போய் காண்பித்தார். மதியம் சாப்பிட்ட பின் தான் இரண்டு மனிக்கு மேல் எங்களின் பயணம் தொடங்கியது. இரண்டு முதல் நான்கு வரை எந்த கோவிலும் திறந்திருக்காது என்று சொன்னார். ஆனாலும் கோயில் பார்க்க போனோம். ஊரை விட்டு கொஞ்சமாக தள்ளி இருந்த கைலாசநாதர் கோயில் எனது முதல் விருப்பமாக இருந்தது. மணற்பாறைகளால் கட்டப் பட்ட, மிகப் பழைய இந்த கோயில் எனக்கு மிகவும் பிடித்தது. கையில் கேமரா இல்லை. என் சிறிய செல்போன் கேமராவில் எடுத்த படங்களை இங்கே வைக்கிறேன். பிறகு, ஏகாம்பரனாதர், சுரகேஷ்வரர், பாண்டவதூது பெருமாள், உலகளந்த பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் என பெரிய கொயில்கள் எல்லாமும் பார்த்தேன். பின்னொரு சந்தர்ப்பத்தில் நல்ல கேமராவோடு போகும் போது விரிவாக எழுதுகிறேன். முக்கியமாக, வரதராஜ பெருமாள் கொயிலில் உள்ள சிற்பக் கூடம் கண்டிப்பாக எழுத வேன்டியது.





















கருத்துகள் இல்லை: