சாலையின் புறத்தில் சரிந்து விழுந்திருக்கும்
இருசக்கர வாகனத்தின் அடியில் மாட்டிக் கொண்டு-
வேதனையைக் கதறும் சிறுபிள்ளையின் குரலுக்கு,
மாநகரப் பேருந்தை நிறுத்தி
குழந்தைக்கு உதவ
ஆட்களைப் பணித்த
அந்த ஓட்டுனரைப் போல-
இன்னும் சிலர் இருப்பதால்
தமிழ்க்குடி நின்று வாழும்;
இன்னும் சில நூறாண்டுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக