புதன், 6 ஏப்ரல், 2011

நின்று வாழும் தமிழ்க்குடி

சாலையின் புறத்தில் சரிந்து விழுந்திருக்கும்

இருசக்கர வாகனத்தின் அடியில் மாட்டிக் கொண்டு-

வேதனையைக் கதறும் சிறுபிள்ளையின் குரலுக்கு,

மாநகரப் பேருந்தை நிறுத்தி

குழந்தைக்கு உதவ

ஆட்களைப் பணித்த

அந்த ஓட்டுனரைப் போல-

இன்னும் சிலர் இருப்பதால்

தமிழ்க்குடி நின்று வாழும்;

இன்னும் சில நூறாண்டுகள்.

கருத்துகள் இல்லை: