திங்கள், 25 ஏப்ரல், 2011

இந்தியாவில் தான் இருக்கிறோமா என்பது சந்தேகமாக உள்ளது


இந்தியாவில் தான் இருக்கிறோமா என்பது சந்தேகமாக உள்ளது. ஆ. ராசா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று சுரேஷ் கல்மாடி கைது. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பெயர் சிபிஐ திங்கள்கிழமை தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. களேபரமாக உள்ளது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாலும் கூட தண்டணை கிடைப்பதும் இவர்கள் ஏற்படுத்திய இழப்புகளை சரி செய்யவும் இவர்கள் திருடியதை மீட்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரிந்தால் தான் இந்த விசயத்தில் உன்மையான திருப்தி ஏற்படும். ஈயப்பானைகளை திருடுகிறவன், குழந்தைகளின் காலிலிருந்து கொலுசுகளைத் திருடுபவல் இவர்கலிடமிருந்தெலாஅம் திருட்டுப் போன பொருட்களை மீட்டு விடும் அரசப்படைகள் இதில் என்ன செய்கிறார்களென்ட்று பார்ப்போம். எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையென்று அலறின. இப்போது எவ்வளவொ நடந்து விட்டது. சும்மா இருக்கிறார்கள். ஆதர்ஷ் குடியிருப்பு ஊழால் அப்படியே இருக்கிறது. மொத்தத்தில் எல்லொரும் சேர்ந்து ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடரின் திரைக்கதை எழுதி வருகிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. இதற்கு இடையில் அன்ன ஹசாரே வேறு காமெடி செய்து ஓய்ந்து விட்டார். ஊழலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிற ஒரு சமூகத்தில் வெறும் அரசியல் வாதிகளை மட்டும் குறை கூறுவதும், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் சரியானவை அல்ல. பிரச்சனை நமது அரசமைப்பில் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும். 49ஓ பற்றி பேசி வருவதை பலரும் ஊக்குவிக்கிற சூழலில் விகிதாச்சார பிரதினிதித்துவத்தை தொட்டும் பேசுவதில்லை. ஓட்டளிக்கும் மக்கள் ஐந்தான்டுகளுக்கு முன்பாகவெ நமது பிரதினிதிகளுக்கான தமது ஆதரவை மறு பரிச்சீலனை செய்யும் வாய்ப்பு வழங்கப் பட வேண்டும். ஒருLKG ழந்தைக்கு கூட ஒரே வருடத்தில் பல பரிட்சைகள் வைத்து பல முறை ரேன்க் கார்டு கொடுத்து கொடுமைப் படுத்தி வரும் நமது சமூகம் மக்கள் பிரதினிதிகளின் செயல்பாடுகலை அலச வாய்ப்பளிக்கப் பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: