திங்கள், 26 ஜூலை, 2010

இரட்டைக் குழல் துப்பாக்கி

காற்றில் அசைந்தாடி

தரை நழுவிய முகம் பார்க்கும் கண்ணாடி...

இரவின் பேரமைதியை உடைத்துக் கொண்டு...

என் உறக்கத்தை

குத்திக் கிழித்துப் போட்டது.

நிலமதிர கீழே விழுந்து

நெஞ்சதிர மூச்சை நிறுத்துகிற குழந்தை-

என்னை உயிர்ப்பிக்க

பின்னொரு கணத்தில்-

பெருங்குரலெடுத்து அழுகிறது.




நன்றிகள்:


தலைப்புக்காக முருகேசன் மாமாவுக்கும் ஜாஹிர் ராஜாவுக்கும்.

இந்த இரண்டு கவிதைகளும் ஒன்று போலவே ஒரே தொனியில் இருப்பதாக கவிஞர்கள் முருகேசன் மாமாவும் சங்கரும் சொன்னார்கள்.

கருத்துகள் இல்லை: