காற்றில் அசைந்தாடி
தரை நழுவிய முகம் பார்க்கும் கண்ணாடி...
இரவின் பேரமைதியை உடைத்துக் கொண்டு...
என் உறக்கத்தை
குத்திக் கிழித்துப் போட்டது.
நிலமதிர கீழே விழுந்து…
நெஞ்சதிர மூச்சை நிறுத்துகிற குழந்தை-
என்னை உயிர்ப்பிக்க…
பின்னொரு கணத்தில்-
பெருங்குரலெடுத்து அழுகிறது.
நன்றிகள்:
தலைப்புக்காக முருகேசன் மாமாவுக்கும் ஜாஹிர் ராஜாவுக்கும்.
இந்த இரண்டு கவிதைகளும் ஒன்று போலவே ஒரே தொனியில் இருப்பதாக கவிஞர்கள் முருகேசன் மாமாவும் சங்கரும் சொன்னார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக