திங்கள், 11 அக்டோபர், 2010

இன்னும் என் பிளேலிஸ்ட் மாறவில்லை


உயிர்மையில் ஷாஜி மற்றும் சாரு நிவேதிதா போன்றவர்கள் இசையைப் பற்றி அடிக்கடி எழுதி வருகிறார்கள். சாரு நேரடியாகவும் ஷாஜி சுற்றி வளைத்தும் இளையராஜாவின் இசையை எதிர் நிலையில் நின்று விமர்சித்து வருகிறார்கள். சாரு நிவேதிதா உலகின் பல்வேறு இசைகளையும் அதன் விற்பன்னர்களையும் இதற்காக துணைக்கழைத்து வருகிறார். எனக்கு இசையின் அடிப்படைகள் கூடத்தெரியாது. இளையராஜாவுக்கு பகழ் பரப்பு செயளாலரும் அல்ல. என்றாலும் எனது கல்லூரி காலந்தொட்டு சுமார் பத்தாண்டுகளாக இசையை ரசித்து வருபவன். உண்மையில் இளையராஜாவின் மிகப்பல பாடல்கள் அற்புதமான பாடல்கள். இப்போதைய தமிழ்ச்சமூகத்தில் திரைப்படம் நமது சமகால கலைவடிவமாகவே உள்ளது. அதில் திரைப்பட பாடல்கள் நமது வாழ்வின் பெரும்பாலான களிப்புக் காலங்களை தன்னுள் கொள்கிறது. அப்படியான ஒரு தளத்தில் இளையராஜாவின் இசை செலுத்திய தாக்கம் கற்பனைக்கெட்டாதது. எந்த ஒன்றையும் அடிப்படை தகுதி இல்லாமல் பெருமக்கள் திரள் ஒத்துக்கொள்ளாது. ரஜினிக்கு கிடைத்திருக்கும் உச்சபட்ச அங்கீகாரமும் இதே வகையே. இவர்கள் இருவரும் எழுதுவதை தொடர்ந்து படிக்கும் ஒருவருக்கு இளையராஜாவெல்லாம் சும்மா; உண்மையில் நல்ல இசை என்பது வேறு என்ற மயக்கத்தை உண்டு பண்ணும். ஒவ்வொருவரின் ரசனையும் வித்தியாசப்படும். ஒருவருக்கு நல்ல இசையாக தோன்றுவது இன்னொருவருக்கு சாதாரணமாக தோன்றும். இதில் தப்பில்லை. கோடிக்கனக்கானவர்களை வருடக்கணக்கில் கட்டி ஆண்ட இசையை ரசனை போதாமை என்று சொல்வது மேதமை அல்ல. ஒரு நிகழ்ச்சியை யாரோ சொன்னார்களோ எங்கோ படித்தேனோ நினைவில்லை. உண்மையாக நடந்தது. ஒரு மது விருந்தில் ஒரு கப்பல் மாலுமியிடம் ஒருவர் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டு இருக்கிறார். இறுதிவரை அந்த மாலுமி தன் கோப்பையில் உள்ள ஒயினை அருந்தவே இல்லை. கையில் வைத்து பேசிக்கொண்டே இருக்கிறார். அவர் கேட்கிறார். என்னங்க குடிக்காம அப்படியே வைத்துக் கொண்டு இருக்கிங்க என்று. மாலுமி சொல்கிறார். முதல் சிப்பில் அருந்திய ஒயினின் சுவையை இன்னமும் ரசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று. நானெல்லாம் அந்த மாதிரி. முதல் சிப்பின் சுவையை இன்னமும் ருசித்துக் கொண்டு இருப்பவன். எனவே இளையராஜா மீதான இந்த இருவரது கட்டுரைகளும் கட்டுக் கட்டிய உரைகளே என்று அறிவிக்கிறேன்.

எனது விருப்பமான சில பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன். இதற்கெல்லாம் இளையராஜா மட்டுமே இசையமைத்தாரா என்பது தெரியவில்லை. அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வாசு மாமா இருப்பதால் வேண்டும் போது கேட்டுக் கொள்ளலாம். இப்பொதைக்கு பாட்டுக்களை கேட்பதோடு சரி. எனது WINAMP பிளேலிஸ்டில் இளையராஜாவின் 237 பாடல்களும் உள்ளன. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கிறேன் என்றாலும் என் கம்ப்பியூட்டர் வாங்கி மூன்றாண்டுகள் கடந்தும் இன்னும் என் பிளேலிஸ்ட் மாறவில்லை.

சில பாடல்கள் மட்டும் இங்கே.

ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது

ஆசைய காத்துல தூது விட்டு

ஆயிரம் மலர்களே மலருங்கள்

மன்றம் வந்த தென்றலுக்கு

பூங்காற்று திரும்புமா

அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்

எங்கே செல்லும் இந்தப்பாதை

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் இல்லை

பூங்காற்று புதிரானது

என் இனிய பொன் நிலாவே

ராக்கம்மா கையத்தட்டு

நினைவோ ஒரு பறவை

ரு விட்டு ரு வந்து

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா

காட்டுக்குயிலு மனசுக்குள்ள

இப்படி அது பாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கிறது.


Thanks to Yahoo movies for photo.


கருத்துகள் இல்லை: