புதன், 19 மே, 2010

முறிந்த குடை

உனது இரு முயற்சிகளையும் மீறி-

குடையை முறித்து...

சாரல் தெளித்து...

உன்னின் பதினோறு முக பாவங்களை

எனக்குக் காட்டிய

கோடைக்கால மழைக்காற்றுக்கு

இந்தக் கவிதையை

பரிசாகக் கொடுத்து விட்டு வந்தேன்.

1 கருத்து:

நளினி சங்கர் சொன்னது…

அருமையான கவிதை.
பார்க்கும் எல்லாவற்றிலிருந்தும் ஒரு கவிதையை ஆக்கும் திறமை உங்களிடம் இருப்பதை எனக்கு ஊர்ஜிப்படுத்திய நிறைய கவிதைகள் உள்ளன.
'வெயிலைத்தாண்டுகிற சிறுமி'

'சவுரீஷின் முகத்தில் புன்னகை'

'தூக்கம் கலையாத பயணி' போன்றவைகளைச் சொல்லலாம்.

இதில் முறிந்த குடையை படிக்கும்போது குதூகலமான உணர்வை ஏற்படுத்துகின்றது.

நானும்தான் பல முறைகள் மழையில் நடந்து போயிருக்கன். குடையுடன் என்னையும் பல
அவள்கள் கடந்து போயிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும் என்னால் இன்னும் என் கவிதைக்குள் அழைத்துவர இயலவில்லை. இதுதான் உங்களுடைய எல்லா கவிதைகளின் சிறப்பும்.