ஞாயிறு, 30 மே, 2010

தேய்ந்து கொண்டே போகும் அபயக்குரல்

நெளியும் ஊர்திகளினூடே புகுந்து

சமிக்ஞை விளக்குகளைக் கடந்து

விரைவாய் முன்னேறுகிற

ஆம்புலன்ஸ் வண்டியின்

தேய்ந்து கொண்டே போகும்

அபய ஒலியால்

நெரிசல் மிக்க இந்த மாலைப்போக்குவரத்திலும்

அழகாய்த்தோன்றுகிறது

இந்த மாநகரம்.

கருத்துகள் இல்லை: