வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கால்சட்டை இல்லாமல் நடந்து போனான்

ஒரு கைக்குழந்தையை எந்த சூதானமும் இன்றி அநாயசமாக கையிலேந்தியபடி அந்தப் பெண் விரைவாக நடந்து கொண்டிருந்தார். பின்னால் அவரது கணவர் இரண்டு வயதிருக்கும் மகனை கையில் பிடித்து நடத்திக்கூட்டியபடி நெரிசலான அந்தச் சாலையில் (ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில்) நடந்து போனார். உடனிருந்த நண்பர் என்ன இப்படி அசிரத்தையாக போகிறார்கள் என்றார். பத்து நிமிடத்தில் கைக்குழந்தையை கணவனும் மூத்த மகனை மனைவியும் கூட்டிக்கொண்டு திரும்பி அதே வழியில் வந்தனர். கணவர் விரைவாக கடந்து போனார். மனைவி எங்களிடம் கையேந்தினார். ஏனோ இரு முறையும் இல்லை எனச் சொல்லி அனுப்பி விட்டேன். அவர்கள் நடக்கும் போதுதான் தெளிவாகப் பார்த்தேன். அந்தச் சிறுவனுக்கு செந்தூரன் வயதிருக்கும். கால்சட்டை இல்லாமல் நடந்து போனான். மிகவும் வேதனையாகிப் போனது. நண்பரிடம் வருத்தப்பட்டேன். மீண்டும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ஒரு பத்து ரூபாய் கொடுத்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும். இந்த இரவு வேதனை மிக்க இரவு.

செப்டம்பர் 17, 2018; ஃபேஸ்புக் பதிவு

கருத்துகள் இல்லை: