சனி, 29 நவம்பர், 2014

பல்லுயிரியம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை

ரெண்டு நாட்களுக்கு முன்பு பல்லுயிரியம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை குறித்த ஒரு கருந்தரங்குக்கு போயிருந்தேன். வழக்குரைஞர்கள், கல்விப்புல அறிவியளாலர்கள், காப்புரிமை அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், தொழில்புல ஆய்வாளர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வு மிக முக்கியமானதாக இருந்தது. இரு வழக்குரைஞர்கள் அதில் பேசினார்கள். பேசியதன் சாரம் இந்தியாவின் காப்புரிமை மற்றும் பல்லுயிரியம் குறித்த சட்டங்கள் நடைமுறைகள் உயிர்த்தொழில் நுட்பவியல் சார்ந்த ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் காப்புரிமைகளையும் குறைத்து வருவதாக அங்கலாய்த்தார்கள். உயிர்த்தொழில்நுட்பவியல் குறித்த வணிகநோக்கோடு கூடிய ஆய்வுகளுக்கும், ஆய்வு முடிவுகளை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்கும் முன்பும், காப்புரிமையின் போதும் தேசிய பல்லுயிரிய ஆணையத்திடன் முன் அனுமதி பெற வேண்டும் என்பது 2002 இல் இருந்து நடைமுறை. தேசிய பல்லுயிரிய சட்டம் 2002 இப்படித்தான் சொல்கிறது. அதுதான் இவர்களுக்கு பெரிய தடங்கலாம். அதனால் தொழில் நலிந்து வருகிறதாம். அதில் ஒருவர் சொல்கிறார் பத்தாண்டுகளாக பணத்தைக் கொட்டி ஆய்வு செய்தவர்கள் இப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டால் எப்படி நாட்டின் வருமானம் உயரும் என்று.

1 கருத்து:

oshylu சொன்னது…

இன்னும் கொஞ்சம் விரிவாக பகிர்ந்திருக்கலாம்