ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஏன் வெகுஜன சினிமா கவனிக்கப்பட வேண்டும்? Part 1

யமுனா ராஜேந்திரனின் சமீபத்திய பதிவு ஒன்றில் “காட்சிப்பிழை' முன்னிறுத்தும் வெகுஜன சினிமா பார்வையில் எனக்குக் கிஞ்சிற்றும் உடன்பாடு இல்லை” என்பதாக எழுதி இருந்தார். ஏன் வெகுஜன சினிமா கவனிக்கப்பட வேண்டும் என்பது குறித்து என் பார்வையில் கொஞ்சம் விரிவாக எழுதி வருகிறேன். அதற்கு முன்னோட்டமாக இது. தற்கால சூழலில் காட்சிப்பிழையின் தேவை மிகவும் அவசியம். தமிழின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக சினிமா மாறி விட்டது. வெகு மக்கள் பேசுகிற பேச்சுகளில் எடுத்தாளுகிற உவமானங்களில் எல்லாமும் சினிமா இரன்டற கலந்து விட்டது. சில மாதங்கள் முன்பு கவுதம சித்தார்த்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் ஒரு வரி-வணிக சினிமாவில் கலையின் சாத்தியங்களை அடையக் கூடிய இடங்களும் உள்ளதாக வருகிறது. உண்மை. சிவாஜி கனேசன் நன்றாக நடித்த படங்களும் உண்டு. வணிக சினிமாக்களை முற்றாக புறக்கனித்து விட்டு மாற்று சினிமா என்று சொல்லப்படுவதையோ நல்ல சினிமா என்பதையோ முன்னெடுத்து விட முடியாது. உணர்வெழுச்சியால் மட்டுமே ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் வெகுஜன சினிமாவின் வலைமையை புரிந்து கொண்ட அலவு கூட லட்சிய பின்புலமுள்ள அமைப்புகளோ சிந்தனையாளர்களோ புரிந்து கொள்வதில்லை. இங்கே சினிமா என்ற பெயரில் ஒன்று இருக்கிறது. அதில் இருந்து தான் நல்ல சினிமா தர முடியும். இலக்கியங்கள் பிறந்த பின்புதான் இலக்கணங்கள் எழுதப்பட்டன. ஆக நல்ல சினிமா என்பதன் அளவுகோல்கள் வெளியே இருந்து வந்து விட முடியாது. ஏற்கனவே இருப்பது ஒன்றில் இருந்து வருவது எளிதாகவும் முன்னெடுத்துச் செல்ல லகுவாகவும் இருக்கும். நாளைய இயக்குனர்கள் காப்பி அடிக்கிறார்கள் அப்படி இப்படி என்று சொன்னாலும், அவர்கள் ஒரு முக்கிய மாற்றத்தை ஆரம்பித்து வைத்து இருக்கிறார்கள். கதாநாயக பிம்பங்களை உடைத்து வருகிறார்கள்.  ஆனானப்பட்ட விஜயே நண்பன் படத்தில் நடிக்கிறார். இப்படியான மாற்றங்களை விரும்புபவர்கள் வெகுஜன சினிமாவை கவனிப்பதும் அதில் நல்ல அம்சங்கள் இருந்தால் எடுத்துச் சொல்லி சினிமா பார்வையாளர்களின் ரசனையை மேம்படுத்தவும் செய்தல் முக்கியமானது.