செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அசத்தப்போவது யாரு நாளைய இயக்குனர்

கடந்த சில வாரங்களாக ஊருக்குப் போயிருக்கும் போதெல்லாம் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியையும் நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் டி விகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை. சும்மா போட்டியாளர்களை பொம்மை போல ஆட்டுவிப்ப்பதும் நடுவர்கள் தீர்ப்பு என்ற முறையில் தம் ஜபர்தஸ்த் வேலைகளை காட்டுவதும் இந்த சின்ன ஏமாற்றத்தைக் கூட தாங்க முடியாமல் கன்கலங்குகிற தொல்வியுற்ற போட்டியாளர்களும், அவர்களின் கண்ணீரை மென்சோக இசையுடன் ஸ்லோமோஷனில் காட்டி காசு பார்க்கும் நிகழ்சித்த் தயாரிப்பளர்களும் என இந்த நிகழ்சிகள் எல்லாம் எனக்கு காண்பதற்கு மிகவும் அருவருப்பக இருந்ததால் பார்ப்பதில்லை. ஆனால் அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக வரும் மதன் பாபுவும் சிட்டி பாபுவும் மிகவும் ஆதரவாக பங்கேற்போரை நடத்துகிறார்கள். இது போட்டி நிகழ்ச்சி அல்ல என்பதாலும் இருக்கலாம். ஆனாலும் பார்ப்பதற்கு ஆறுதலாக இருந்தது. மிகவும் சின்னப் பையன்கள் கூட வந்து ஜோக் சொல்லி விட்டுப் போகிறார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக வரும் பிரபலங்களும் ரசித்து நிகழ்ச்சியை பார்கிறார்கள். பங்கேற்பவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். சில வழக்கமான குறைகளும் இருந்தாலும் பொழுது போக்காக பார்க்க நல்ல நிகழ்ச்சி.

அடுத்தது நாளைய இயக்குனர். இதில் நடுவராக வரும் பிரதாப்போத்தன் மிகவும் அராஜகப் போக்குடன் நடந்து கொள்கிறார். ஒவ்வொரு படத்தையும் பற்றி பாலசந்தர் பேசுகிறார். குறைகளையும் சொல்கிறார். பெரும்பாலும் நாசுக்கக சொல்கிறார். இன்னொரு நடுவரான மதனும் இதை நாசுக்காகவெ செய்கிறார். ஆனால் பிரதாப்போத்தன் மட்டும் அப்பட்டமாக சொல்கிறார். உன்மையை சொல்வதில் அதுவும் ஒளிவு மறைவின்றி சொல்வதில் தப்பில்லை. ஆனால் இவர் தேடிப்பிடித்து சொல்வது மாதிரி உள்ளது. இளம் படைப்பாளிகளை சுணங்க வைக்கும் விதமான ஒரு தொணியுடனே தனது தீர்ப்பை கூறுகிறார்.
என்றாலும் இந்த நிகழ்ச்சியில் காட்டப் படும் இளம் படைப்பாளிகளின் படங்கள் எல்லாம் மிக அருமையாக உள்ளன. கொஞ்ச நாட்கள் முன்பு வீட்டுக் கணக்கு என்ற படம் பார்த்தேன். எஸ் ராமகிருஷ்னன் கதை. மிகவும் நல்ல படம். நடிப்பு கொஞ்சம் சோடை போயிருந்தாலும் இதெல்லாம் நல்ல முயற்சிகள்.

1 கருத்து:

நளினி சங்கர் சொன்னது…

'நாளைய இயக்குநர்'நானும் மிகவும் ரசித்து பார்க்கும் நிகழ்ச்சி ஜே.பி. (பிராதப் போத்தனையும், தேவையில்லாததை உலறும் தொகுப்பாளினையையும் திட்டிக்கொண்டே).