வியாழன், 25 நவம்பர், 2010

சீமான் மீதான அடக்குமுறையை கண்டிக்கிறேன்


செய்திகள் கேட்பதும் நாளிதழ்கள் படிப்பதும் எப்போதும் கோபத்தையே தூண்டுகின்றன. இன்று ஒரு செய்தியை கேட்டதும் மிகுந்த கோபம் தான் பொங்கியது. சீமான் மீதான வழக்கு விசாரணை இன்றும் தள்ளிப் போய் உள்ளது. மத்திய மானில அரசுகளின் பழிவாங்கும் போக்குகள் எல்லை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. கடந்த நான்கு மாதங்களாக வாய்தா வாங்கி வாங்கியே வழக்கை ஒத்தி வைத்த அரசு இன்று வழக்கறிஞர் ஆஜராகாதால் தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது. வழக்கின் விசாரணை நடந்தால் சீமான் விடுதலை பெற அல்லது வெளியே வர வாய்ப்புகள் அதிகம் என அரசு இதை ஒத்திப் போட்டு வருகிறது. இது ஒரு நாகரீகமான ஜன நாயகப்பூர்வமான செயல் அல்ல.இப்ப்படி பண்ணிப் பண்ணி தமில் தேசியவாதிகளை உசுப்பி விடவே செய்கிறது அரசு. சீமானின் பேச்சுக்கள் பெரும்பாலும் மறைக்கப் படுவதால் மக்கலீடையே அது பரவலாக பேசப்படுவதில்லை. ஆனால் கைது சிறை என சீமான் அடைக்கப்பட்டதும் எதற்கு என்ற கேள்வி வெகு இயல்பாக எழுகிறது. நான் தமிழ்தேசியம் ஆதரிப்பவன் அல்ல என்றாலும் அப்படி கேட்பவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதை எதிர்க்கிறேன். தேசிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியோடு பயண்படுத்தி வருகிறது. தமில்தேசியவாதிகள் வைக்கும் சில கேள்விகள் பதிலளிக்க முடியாத அளவு நியாயமாகவும் உள்ளன. பெரியார் அணைப்பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி நடந்து வரும் கேரள அரசு என்ன தெசிய ஒருமைப்பாட்டை பேணி வருகிறது? கோர்ட் சொன்னாலும் தண்ணீர் தரமுடியாது என்னும் கர்னாடகம் என்ன ஒருமைப்பாட்டை பேணுகிறது? தமிழக மீனவனை அடித்தால் சிங்கள மாணவனை அடிப்போம் என்று பேசியதற்கே தேசிய பாதுகாப்பு சட்டம் என்றால் வாரம் மாதமொன்றாக ஆண்டாண்டு காலமாக கொல்லப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருகிற தமிழக மீனவர்களை காக்க இந்த தேசிய பாதுகாப்புவாதிகள் என்ன செய்தார்கள்? அடுத்த ஆண்டு இந்த ஆண்டளவுக்கு மீனவர்கள் மீதான வன்முறை இருக்காது என்று ப சிதம்பரம் பேசுகிறார். ஒரு உள்துறை அமைச்சர் அதுவும் தமிழர் இப்படி பேசினால் எப்படி தமிழக மீனவர்கள் இந்திய தேசியத்தை நம்புவார்கள்? இப்படி பேச ஒரு அமைச்சருக்கு எந்தளவு கல்னெஞ்சமும் திமிர்த்தனமும் இருக்க வேண்டும்? இதைக் கேள்வி கேட்கவேண்டிய தமிழக மன்னர் சினிமாவுக்கு கதை வசனம் எழுதுகிறார்; சினிமா நடிகைகளை ஆடவிட்டு ரசிக்கிறார். ஆனால் இந்த மீனவர்களின்பால் பேசிய ஒரு போராட்டக்காரரை சிறையிலடைத்து, வருகிற தேர்தலை மனதில் கொண்டு உள்ளேயே வைத்திருக்க இந்த மன்னர் நினைக்கிறார். சீமானின் அரசியல் நிலைப்பாடு எனக்கு ஏற்புடையது அல்ல என்றாலும் அவரின் மீதான அடக்குமுறையை கண்டிக்கிறேன்.

கூகிள் இமேஜுக்கு நன்றிகள்>

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

உண்மை இப்போது தோற்கலாம் . ஆனால் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும். அருமையான பதிவு ...

பொற்கோ சொன்னது…

தமிழ் தேசியத்தின் தேவை காலத்தின் தேவை!
பதிவுக்கு பாராட்டுக்கள்!

Jayaprakashvel சொன்னது…

My post is to critissize about atrocities on Seeman. Not to encourage his ideology. I am not supporting his ideology