சனி, 21 ஆகஸ்ட், 2010

இன்றைய எரிச்சல்: மதன் கார்க்கியும் பாட்டெழுதும் சாப்ட்வேரும்

சில நாட்களாகவே இந்த எரிச்சல் இருக்கிறது. இந்திரன் பட பாடல்கள் வெளி வந்த நாளில் இருந்தே. பூம் பூம் ரோபோ ரோபோ என்ற பாடல் தான் அந்த எரிச்சல். பாட்டு பரவால்ல . ஆனா வரிகள்? என்ன கொடுமையான வரிகள். அவ்வளவு பெரிய படத்துக்கு வரட்டுத்தனமான வரிகள். விஜய்க்கு துவக்க பாடல்கள் எழுதுகிறவர்கள் குட இதுவரை நல்லாவே எழுதி இருக்கிறார்கள். இந்திரனை விவரிக்கிறேன் என்ற பாவனையில் மகா சாதாரண வரிகளை கொண்டு அந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. மதன் கார்கி என்ற சின்ன வைரமுத்து எழுதி இருக்கிறார். இவ்வளவு சின்ன வயதிலும் இவருக்கு கற்பனை வறட்சி இருக்கிற போது வேறென்ன சொல்ல. வாயுண்டு வயிறில்லை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முளை ஐசக் நியுட்டன் லீலை இப்படி போகிறது கொடுமை. இதில் கார்கி ஒரு சாப்ட்வேர் கண்டு பிடித்திருக்கிரரம் . இசைக்கு ஏற்ப அது வார்த்தைகளை சிபாரிசு செய்யுமாம் வர்த்தைகளுக்குமா பஞ்சம்? எதில் எதிலெல்லாம் சோம்பேறித்தனம் ? இதை விட நாட்டில் எரிச்சல் பட அன்றாடம் நிறைய உண்டு என்றாலும் கலையில் என்னால் தினம் எப் எம் இல் பாடல்களை கேட்க எரிச்சலாக இருந்ததால் எழுதிவிட்டேன்

1 கருத்து:

Saran சொன்னது…

நீங்க சொல்றது சரிதான். அப்புறம் அது இந்திரன் இல்லை எந்திரன்-ங்க.