வியாழன், 17 டிசம்பர், 2009

சாவின் சூட்சுமம்

சாவதற்கு நல்ல வழி
கேட்டவனிடம்-

தூக்க மாத்திரைகள்
நல்ல தேர்வு அல்ல என்று சொல்லி,
மண்ணில் புதையுண்டிருக்கும்
இரும்புக் கத்தியை எடுத்து
துருப்பிடித்த.... மழுங்கின....
அதன் முனையால்
குரல்வளையை அறுத்துக் கொள்;
என வழிமுறை கூறுகிறாய்.

ஒரு வேளை
உயிர் போவதற்கான
ரத்த இழப்பு இல்லாமற் போனாலும்-
விரைவில்,
சீழ் பிடித்து சாவு நேரும்;
என சாவின் சூட்சுமம் சொல்கிறாய்.

கனவில்தானென்றாலும்
இது பெருங்கொடூரமடி ஜோதி.

கருத்துகள் இல்லை: