வியாழன், 17 டிசம்பர், 2009

வாழ்வின் சுவாசம்

பூவுதிர்க்கிற பெருமரங்களையும்

பட்டுப் போக வைக்கும்

வேரடி பூஞ்சையாய் -

நிராசைகளின் பக்கங்களை

புரட்டிக்கொண்டு இருக்கும்

உள்மனம்

வாழ்வின் எளிய தருணங்களையும்

வெறுமையாக்குகிறது.

நிறைந்து போய் விடாத அந்த

வெறுமைகளில் இருக்கிறது

வாழ்வின் சுவாசம்.

கருத்துகள் இல்லை: