செவ்வாய், 29 செப்டம்பர், 2009

நான்கு வழிச்சாலைகள்


இடம் : சித்தலவாய்

இப்போதெல்லாம் நாட்டின் பல இடங்களில் சாலை போட்டுக்கொண்டும் இருக்கின்ற சாலைகளை அகலப்படுத்தியும் வருகிறார்கள். சாலைகள் மேம்பாடு தேவையான ஒன்றுதான். ஆனாலும் இது போன்ற திட்டங்களினால் வயதான மரங்கள் பழைமையான கட்டடங்கள் எளிய மக்களின் குடியிருப்புகள் அழிக்கப்படுகின்றன. சில மாதங்கள் முன்பு திருச்சி கரூர் சாலையில் போன பொது இந்த படங்களை எடுத்தேன். அந்த சாலை நெடுகிலும் நான்கு வழிச்சாலைகள் பணிக்காக மரங்களும் வீடுகளும் அகற்றப்பட்டு வருகின்றன. போர் நடக்கும் பகுதி போல உள்ளது. மிகவும் வருத்தமான விஷயம் தான் என்றாலும் முன்னேற்றப் பணிகளுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் ஆகவேண்டும்.

கருத்துகள் இல்லை: