திங்கள், 28 செப்டம்பர், 2009

வேடிக்கை பார்த்தவன்

இங்கே எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது. வெறும் எழுத்து என்ன செய்துவிட முடியும் என்ற அவநம்பிக்கை தான் அதற்கு காரணம். ஈழத்தில் என் சகோதரர்கள் சாவுடன் போராடியபோது இங்கே நான் என் வேலைக்காக போராடினேன். அவர்களுக்காக எதுவும் செய்யத்துணியாமல் செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தேன். மிகப்பல காலமாக என்னுள் ஒரு கனவு இருந்தது. மலரும் தமிழ் ஈழத்தில் ஒரு எளிய ஆசிரியராக கொஞ்ச காலமேனும் வேலை செய்ய வேண்டும் என்று. இப்போது மலரும் தமிழ் ஈழத்தில் கால் வைக்க எனக்கு அருகதை உள்ளதா என் தெரியவில்லை. என்றாலும் தமிழ் ஈழம் மலரட்டும். என் மக்கள் அங்கே சமாதானத்துடனும் சுதந்திரத்துடனும் மகிழ்வாய் வாழட்டும் .

1 கருத்து:

ஷண்முகப்ரியன் சொன்னது…

உங்கள் இனிய கனவு நிறைவேற வேண்டும்,நண்பரே.