வியாழன், 23 செப்டம்பர், 2010

நான் கோடீஸ்வரன்







இந்தக் குழந்தைகள் எல்லோருமே என் உறவுக்காரர்கள். என்பதையும் மீறி எனக்கு நண்பர்கள். நேற்று எதேச்சையாக என் பழைய செல்போனின் படங்களைத்தேடிய போது கிடைத்தவை. நேற்று பார்த்த போது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. அவர்களின் சிரிப்பு உண்மையில் எத்தனை அழகானது? முதலில் எதாவது கவிதைக்கு இந்தப் படங்களை உபயோகப்படுத்தலாம் என இருந்தேன். ஆனால் இதையே கவிதை என்று சொல்லுமளவு மிக அற்புதமாக படங்களாக இவை உள்ளன. குழந்தைகளை நண்பர்களாகப் பெற்றவர்கள் பேறு பெற்றவர்கள். அந்த வகையில் நான் கோடீஸ்வரன்.

கருத்துகள் இல்லை: