செவ்வாய், 24 ஜூன், 2008

தசாவதாரம்

கமல்ஹாசன் பத்து வேடங்கள் செய்ய நினைத்தது தவறில்லை. ஆனால் பத்து முகமூடிகள் தேவையில்லை. முகமூடிக்குள் மறைந்திருக்கும் முகத்தால் என்ன நடிப்பை காட்டிவிட முடியும்? ஒப்பனை செய்வதோடு நின்று இருக்கலாம். நவராத்திரியில் சிவாஜி ஒன்பது வேடம் போட்டார். நடிப்பில் வித்யாசம் காடட்டினார். கமல் அது போலக் கூட செய்யவில்லை. அபத்தமான காமெடிகள். லாகிக் இல்லாத காட்சி அமைப்புகள். இரண்டு நாடுகளின் தலைவர்கள் தலையிடும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்ப்பட்ட ஒரு வழக்கில் நான்கே நான்கு போலீஸ்காரர்கள் இரண்டு டம்மி எப் பி இ. கொடுமை. கதாநாயகிக்கு கடைசி வரை பெருமாள்தான் பெரிது. வைரஸ் பற்றிய பதைப்பு துளியும் இல்லை. கபிலன் பாவம். கவிதை வருமளவு நடிப்பு வரவில்லை. வலிந்து ரெண்டு கவிதை வேறு. படத்தில் நல்ல விஷயம் டூயட் இல்லை. கமலின் குரல் மீண்டும் இனிமையாகி விட்டது. இசை பூமியை ஆளட்டும்.

கருத்துகள் இல்லை: