வியாழன், 14 ஜூலை, 2011

நேற்றும் மும்பையில் குண்டு வெடிப்புகள்: இன்னும் எத்தனை?

இன்றைய இந்து நாளிதழில் மும்பையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் படங்களை நிறைய போட்டிருந்தார்கள். பெரும்பாலும் இது போன்றவை வெறும் செய்திகளாகவே நான் கடந்து போவதுண்டு. இன்று அவ்வாறு முடியவில்லை. அந்தப் படங்கள் மிக அப்பட்டமாக குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டு உயிரொடு இருப்பவர்களின் ரணங்களைக் காட்டியது என்னை மிகவும் வருத்தியது. இந்த மாதிரி படங்களை வெளியிடக் கூடாது என்பது என் தணிப்பட்ட எண்ணம். அது மக்கள் மனதில் உடனடியாக ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணும். அடிக்கடி இப்படி பார்கிற போது அது பழகி பின் நேரில் நடந்தால் கூட சகஜமாகி விடுமோ என்ற அச்சம் எனக்கு உண்டு. பத்திர்க்கைகள் விற்க வேண்டும் என்பதால் வெரும் ஓரிரு படங்களுக்கு பதிலாக இப்படி அதிக படங்களை போடுகிறார்கள். அது குறைக்கப்பட வேண்டும்.

மும்பை வாசிகள் உன்மையிலேயே தைரியசாலிகள் தான். எத்தனை குண்டுவெடிப்புகள்? பயங்கரவாத தாக்குதல்கள்? இத்தனைக்கும் மீறி மக்கள் அங்கே குவிந்த வண்ணமும் பிழப்பு நடத்தியும் வருகிறார்கள். தமில் நாட்டில் எவ்வளவு பயமின்றி வாழிகிறோம். சில நாட்களில் நான் பேருந்து ரயில்களில் போகும் போது நினைப்பதுண்டு. மும்பை மக்கள் நம்மைப் போலவே கவலையின்றி போவார்களா படு கவனத்தோடு போவார்களா என்று. அங்கே அமைதி நிலவட்டும்.

மும்பை போன்ற பெரு நகரங்களில் இது மாதிரியான தாக்குதல்கள் மிக எளிதாக நிகழ்த்தப் படுகிண்ரன. உலவுத்துறையாகட்டும் பாதுகாப்புத்துறையாகட்டும். கண்கானிப்பது மிக கடிணம் தான். மக்கள் கொஞ்சம் விழிப்போடும் பொறுப்போடும் இருந்து கொள்ள வேன்டியதுதான். இது மாதிரியான எல்லா நாசகாரியங்களிலும் உள்ளூர் வாசிகள் சிலரின் உதவியும் இருப்பதுண்டு. அது குறையாமல் அல்லது குறைக்கப் படாமல் இது மாதிரியான சதிச்செயல்கலை தடுப்பது கடினம்.

இந்த குண்டுகளை யார் வைத்தார்களோ?

கருத்துகள் இல்லை: