சனி, 4 ஜூலை, 2009

உயிரும் மனமும்

மனம் என்பது ஒரு இயங்கு நிலை. அது தனிப்பட்ட உறுப்பு அல்ல. அது மூளையை இயக்குகிறது.இந்த உடல் இயங்குகிறது என்றால் அது உயிர் என்ற சக்தி இருக்கும் வரைதான். இதில் மனம் என்பதும் ஆன்மா என்பதும் ஒன்றே. இந்த பிரபஞ்சத்தில் எல்லா அணுக்களையும் இயக்குகிற ஆதார சக்தி எதுவோ அதுதான் நமது உயிரும். விந்தணுவும் அண்டமும் கருவுறும் பொது அந்த சக்தி உயிராய் கருவில் அமர்கிறது . அதுவே உடல் என்னும் இயந்திரக் கலவை இயங்க எரிபொருளாக உள்ளது. உடல் இயங்க முடியாத நிலை வரும் பொது அந்த சக்தி உடலிலிருந்து பிரிந்து பிரபஞ்சத்தின் ஆதாரப் பொருட்களோடு இணைக்கிறது அல்லது வேறு ஒரு உயிராக பிறப்பு எடுக்கிறது.

இதுவரையில் எனது புரிதல் இதுவாக இருந்தது. கடந்த மாதம் ரயிலில் ஒருவரிடம் பேசிய பொது அவர் வேறு மாதிரி சொன்னார். விந்தணு ஆணில் உற்பத்தியாகும் போதே ஆன்மா அங்கே குடியேருகிரது. அதுதான் பின் இயக்குகிறது என்றார். அவரின் கருத்துப் படி நமது ஆன்மா ஒன்று அல்ல . அது பல உயிர்களது ஆன்மாக்களின் கலவை. அதனால் தான் ஒவ்வொருவரின் குணாதிசயமும் மாறுபடுகிறது. ஒரு சமயம் நல்லவனா போலவும் மறு சமயம் கெட்டவன் போலவும் . அவர் சொன்னதும் யோசிக்க வேண்டியது.

நான் சொன்ன விசயங்கள் இரண்டு. ஒன்று எனது புரிதல் இன்னொன்று ஒரு ரயில் நண்பர் சொன்னது. இரண்டும் உண்மை என்று சொல்லவில்லை. யோசிக்க வேண்டியது. இது தொடர்பாக இன்னும் அறிவியல் உலகமே முழு தீர்மானத்திற்கு வரவில்லை. இதன் மீதான ஆய்வுகளும் குறைவு.

ஆன்மா என்பது என்னை பொறுத்துவரை நமது சிந்தனை. அதை மனம் என்றும் சொல்லலாம். அது தான் மூளையை இயக்கு கிறது.

கருவுறுதல் என்பது இரண்டு இருபத்து மூன்று குரோமோசோம்கள் உள்ள பாளினசெல்கள் இணைந்து ஒரு நாற்பத்து ஆறு குரோமோசோம் உள்ள செல்லாக மாறுவது . அது தான் கரு. இந்த கருதான் முழு மாநிதனாக வளர முடியும். விந்து அண்டம் இரண்டும் உயிருள்ள செல்கள் தான். மனித உடலில் நகம் முடி எலும்பு இன்னும் வெகு சிலவற்றை தவிர மற்ற எல்லலாமே உயிருள்ளது தான். அறிவியல் கோட்பாடுகளின் படி எந்த செல்லையும் எடுத்து ஒரு முழு உயிரியை உருவாக்கி விட முடியும்.

எல்லா வகையான மரண காரணிகளும் ஏற்படுத்தும் இறுதி விளைவு மூளை தனது வேலேயை நிறுத்துவது தான். முளை செத்த பின்னும் கொஞ்ச காலம் இந்த உறுப்புகள் இயங்கலாம். ஆனால் அந்த உடல் அதன் பிறகு உயிர் இல்லை என்றுதான் கருதப் படுகிறது. இந்த இதயம் மற்ற உறுப்புகள் எல்லாம் ஒரு இயந்திரம் போல. இவை எல்லாவற்றுக்கும் சாவி மூளைதான். அதன் செயல்பாட்டை நான் மனம் என்கிறேன். சிந்தனை என்றும் சொல்லலாம். ஆனால் இதற்கும் நமது உடலை அது இயக்குவதற்கும் சம்பந்தம் இல்லை. வாதம் வந்தவர்கள் உறுப்புகள் இயங்காவிட்டாலும் சிந்தனை குறைவு துளியும் இல்லை. நமது உடலை முளை இயக்கம் விதம் நன்றாக ஆராயப் பட்டுள்ளது. அதற்கும் சிந்தனைக்கும் மனதிற்கும் சம்பந்தம் இஉல்லை. உடல் இயக்கம் என்பது தன்னிச்சையாய் நிகழ்வது. ஆனால் சிந்தனையை நாம் கட்டுப்படுத்தலாம். அதுதான் அந்த கட்டுப்பட்ட சிந்தனைதான் அல்லது சிந்தனையை கட்டுப்படுத்தும் மூளையின் செயல்பாடுதான் மனம்.

இந்த ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கம் மனித உயிர் உள்பட புறத்தில் இருந்து பெறப்பட்ட சக்தியால் தான் இயக்கப் படுகிறது. ஒரு கரு உருவாகும் பொது என்னென நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பது ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் கூட உள்ளது. ஆனால் அந்த நிகழ்வுகளை தூண்டும் சக்தி அல்லது காரணி என்னவென்பதை இன்னும் முழுதாக மனிதகுலம் அறிந்த பாடில்லை. இந்த மதங்கள் சொல்கிற பரம்பொருளை இயற்பியல்வாதிகள் சொல்கிற கருந்துளையுடன் நான் ஒப்பிடுவீன். இந்த பிரபஞ்சத்தில் சக்க்தி உருவாகவும் இல்லை அழிவதும் இல்லை. ஒரு ஆற்றல் இன்னொரு ஆற்றலான்\க பரிணாமம் பெறுகிறது. இதைதான் நான் மறு பிறப்பு என கொள்கிறேன். இதற்காக நான் வேத சாஸ்திர அபிமானி என என்ன வேண்டாம். அறிவியல் புலத்தில்; முனைவர் பட்டம் வரை பெற்று உள்ள எனது எனது அறிவு இதை ஏற்றுக் கொள்கிறது.

அறிவியல் உலகம் எதிர்மறை ஆய்வுகளையும் ஒத்துக் கொள்கிறது. ஆனால் நமது முன்னோர்கள் உணர்ந்த எழுதியவற்றை புரட்டு என ஆய்வு செய்யாமலே ஒதுக்குவதில் பெருமிதம் கொள்கிறது.

உலகம் தட்டை என்றபோதும் அது ஒரு அறிவியல் கருத்து. உலகம் உருண்டை என்றானபோதும் அது அறிவியல் கருத்து.

செவ்வாய் என்று சோதிடம் சொன்னால் புரட்டு. என்னை பொறுத்தவரை உண்மை இல்லாமை எந்த ஒரு கருத்தையும் உருவாக்க முடியாது. ஆன்மா என்ற ஒன்று இல்லை என்று இதுவரை யாரும் நிரூபித்து காட்டவில்லை. நமது அறிவியல் ஐரோப்பிய வளர்ச்சியோடு இணைந்தது. அதன் வயது ரொம்ம குறைவு. ஆனால் நம் இந்திய மரபு சார் சிந்தனைகள் மிகப் பழையன. முறையாக ஆய்வு செய்தால் நிறைய உண்மைகள் புலனாகும்.

ந்த ஒன்று இயங்குவதற்கும் அடிப்படையாக ஒரு சக்தி அல்லது ஆற்றல் தேவை. எளிதாக் சொன்னால் எரிபொருள். பள்ளத்தில் உருளும் பந்தில் கூட potential energy இறுக்க வேண்டும். இல்லாவிட்டால் உருளாது. இது ஆறாம் வகுப்பு இயற்பியல். உடலின் இயக்கம் உயிர். அதாவது உடலின் இயக்கங்களை இயக்குவது உயிர்.

ந்திய சிந்தனை மரபின் (இந்து மரபு என்று கொள்ள வேண்டாம். அது வேறு வகையில் விவாதிக்க சொல்லும். அது எனக்கு ஏற்புடையது அல்ல ) படியும் நான் ஏற்றுக் கொண்ட வரையிலும் ஆன்மா பிரிந்து வேருரோ உடலில் உயிரை உருவாக்கும். அல்லது பிரபஞ்ச பரம்பொருளுடன் இணையும் . அறிவியல் உலகம் விவாதிக்கிற கருந்துளை ஆகா கூட இது இருக்கலாம். நீங்கள் தொலைக்காட்சி பெட்டியை அணைத்தால் உங்களுக்கு மட்டும் தான் காட்சிகள் மறையும். உலகில் எத்தனை பெட்டிகள் உள்ளன?
அதுபோல உலகில் பல உயிர்கள் உள்ளன. இந்த ஆன்மா என்பதை மீண்டும் சொல்கிறேன் அது ஒரு வகை சக்தி. ஆற்றல். உடலில் இருந்து பிரிந்தால் அது வேறு ஏதாவது உயிரினத்தின் இயங்கு சக்தியாக இருக்கலாம். அல்லது ஒரு நிக்கல் கட்மியம் பேட்டரியில் மின்சாரமாக போகலாம். ஒரு உயிரில் இருந்து பிரிந்த ஆன்மா இன்னொரு உயிரில் தான் சேர வேண்டும் என்பது இல்லை. ஏதாவது உயிரற்ற பொருளிலும் ஆற்றலாக சேரலாம். இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிருள்ள உயிரற்ற பொருட்களும் பிரபஞ்சத்தின் அங்கம். அதற்கு ஒரே ஒரு ஆதார சக்திதான். அது தான் சூரியனையும் இயக்குகிறது. உங்களையும் இயக்குகிறது. காற்றில் குப்பையையும் பறக்க வைக்கிறது. இது அறிவியல் பூர்வமான உண்மை

மொத்தத்தில் உயிர் என்பதும் உண்டு. மனம் அல்லது ஆன்மா என்பதும் உண்டு. இதை இரண்டையும் அறிவியல் உலகம் இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை. அதனால் அது இல்லை என்று முடிவாகிவிடவில்லை. நமது மனித குளத்தின் தற்போதைய அறிவு வளர்ச்சி அதயு ஆராயும் அளவு இன்னும் வளரவில்லை.

திங்கள், 1 ஜூன், 2009

சில படங்கள்




செவ்வாய், 21 ஏப்ரல், 2009

சிவானந்தம் இறுதி ஊர்வலம்

கடந்த ஞாயிறு அன்று வேறு ஒரு விவகாரமாக சொந்த ஊருக்கு போய் இருந்தேன். தோழர் சிற்பிமகன் காலையில் அழைத்து சிவானந்தம் இறுதி ஊர்வலம் பற்றி பெசினார்.முதல் நாள் இரவுதான் நிலமை கவலைக்கிடம் என்ற செய்தியுடன் சென்னையில் இருந்து வந்தேன். மாலை ஐந்து மணி அளவில் ஜவஹர் பஜாரில் ஊர்வலத்துடன் இணைந்தேன். புரட்சிகர இளைஞர் முண்ணனி மற்றும் பெண்கள் முன்னணி முன்னெடுத்துச் சென்ற ஊர்வலத்தில் பலவித முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழர் தலைவர் பழ நெடுமாறன் உ தனியரசு மற்றும் சில இயக்கங்களின் தலைவர்களின் இரங்கல் உரைகளுக்கு பின் ரயில் நிலையத்தின் பின்னுள்ள எரிவாயு மயானத்தில் சிதை எரிக்கப் பட்டது.

தாரள மயமாக்கம், ஏகாதிபத்தியம் பொன்ற முழக்கங்கல் எழுப்பப் பட்டது எனக்கு தெவையற்றதாகப் பட்டது. சிற்பிமகனும் வந்தேறிகளே வெளியேறுங்கள் என்ற பொதுவான முழக்கத்திற்காக வருந்தினார்.

இரங்கல் உரையின் போது ஒரு நண்பர் உணர்வு மிகுதியால் சில முழக்கங்களை எழுப்ப நெடுமாறன் அய்யா கடிந்து கொன்டார். கூச்சல் என்று சொன்னதை அந்த தோழர் முழக்கம் என திருத்தினார். ஆனால் நெடுமாறன் இரன்டு பதங்களையும் உபயொகப் படுத்தினார். இதுவும் தேவையற்றது. ஆனால் அவர் விரும்பியது ஒரு கட்டுப் பாடு. சில பேர் சரக்கில் இருந்தனர்.அதுவும் இந்த குழப்படிகளுக்கு காரணம். என்றாலும் இந்த ஊர்வலத்திற்காக வந்த அந்த முன்னூறுக்கும் குறையாத பேர்கள் தமிழுணர்வு உந்திதான் வந்தனர். தள்ளாத வயதினரும் இதில் அட்ங்குவர். இதன் கானொளிகளை நாலை இணைக்கிரேன்.














சனி, 21 பிப்ரவரி, 2009

தமிழக சட்ட ஒழுங்கு சீர் கெட்டதா?

இரண்டு சம்பவங்கள் நமது தமிழக காவல் துறையை தலை குனிய வைத்துள்ளன. பலமுறை குனிந்த தலைதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் குனிய தவறுவதில்லை.

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல். கடலூரில் தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தின் பின்னான கலவரங்கள். முதலாவது காவல் துரையின் கொடூரப் போக்கையும் இரண்டாவது காவல்துறையின் கையாலாகாத தனத்தையும் காட்டுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின் பின்னாலும் ஆல்வோர் இல்லை என சொல்ல முடியுமா?

காவல் துறையை அடியாள் துறையாக மாற்றி வரும் அரசு ஒன்றை மறக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என சொல்ல இவை போதும். இவற்றால் மக்கள் படும் துயரமும் , அவர்கள் கண்ட பீதியும் தேர்தல் நேரங்களில் எதிரொலிக்கும். எதிர்கட்சிகள் இதை நினைவூட்டும்

திங்கள், 16 பிப்ரவரி, 2009

என் கண்ணீர் நதியின்

கரைகளை

உடைத்து விட்ட பெருமை

கடைசியாய்

நீ எழுதிய

அந்த மறுப்புக் கடிதத்திற்குத்தான்

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

சுத்தப் படுத்துவதை விடவும் சுத்தமாக வைத்திருப்பது எளிது.

௧1. மக்கள் வேலையை முடித்த பின்பு

௨. .2. பை நிறைய இருப்பது இந்த சமூகத்தின் குப்பைகள் தான்


௩. 3. குப்பை சேகரம்

௪4. இந்த சூரியந்தான் இதெல்லாம் பார்த்து விட்டு நிலவுக்கு தகவல் சொல்லி அனுப்பியது
5. வண்டியில் பொகிற போது கிழக்கு கடற்கரை சாலையில் ஓரிடம்
கடந்த ஞாயிறு சென்னை முதலைப் பண்ணையில் இருந்து சில கி மீ தொலைவு வரை சென்னை டிரெக்கிங் கிளப் (http://www.chennaitrekkers.org/) சார்பாக அந்த நண்பர்களுடன் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிக்காக சென்றேன்.இந்த கிளப் நிறைய சாகசப் பயணங்களை நடத்துகிறது. ஆனால் நான் கலந்து கொல்லும் முதல் நிகழ்வு இது தான். எதற்கு மெனக்கெட்டு அங்கே போய் சுத்தம் செய்ய வேண்டும்? ஆலிவ் ரிட்லீ (http://en.wikipedia.org/wiki/Olive_Ridley) என்ற ரக ஆமை ஒன்று முட்டையிட கிழக்கு கடற்கரையை நாடும் தருணம் இது (http://world-turtle-trust.org/project07.html) . எனவே இந்த சுத்தப் படுத்தும் பணியில் இவர்களும் இன்னும் நிறைய பேரும். முழுதாக எழுத நேரம் வாய்க்காததால் செய்தியை மட்டும் சொல்லி படங்கள் சிலவற்றை இணைத்து உள்ளேன். இதுவும் என் செல்போன் இல் 1.3 மெகா பிக்செல் கேமராவினால் எடுக்கப் பட்டது. மொத்தத்தில் ஒன்று புரிந்தது. சுத்தப் படுத்துவதை விடவும் சுத்தமாக வைத்திருப்பது எளிது. வெறும் 22 பேர்கள் மட்டுமே குரைந்தது இரண்டு கி மீ நீள கடற்கரையை இரண்டு மணி நெரத்தில் சுத்தம் செய்ய முடிகிர பொது நமது அரசியல் கட்சிகள் அவர்களது தொண்டர்களைக் கொண்டு என்னவெல்லாம் செய்துவிடலாம்.?




கோயில் நகரம்

௧. வரதராஜ பெருமாள் கோவில் முகப்பு

௨. ஏகாம்பரநாதர் கோவிலில்

௩. கைலாசநாதர் கோவில் முகப்பு.



௪. கைலாசநாதர் கோவில்


௫. வரதராஜ பெருமாள் கோவில் குளமும் அத்திகிரி பெருமாள் கோவிலும்



௬. ஒரு சுவரில் இருந்த கல்வெட்டு






௭. சுரகறேஷ்வரர் கோவில் : இதன் முஉலவர் சன்னதி வழ்க்கமான சதுர வடிவில் இல்லாமல் வட்ட வடிவில் உள்ளது.








௮. கைலாசநாதர் கோவிலில் இது போல நிறைய சிலைகள் உள்ளன.







௯. கைலாசநாதர் கோயில் பிரகாரம்

இன்று வேலை விசயமாக காஞ்சிபுரம் சென்று இருந்தேன். மதியமே என் வேலை முடிந்து விட்டது. பின் கோப்பெருஞ்சோழன் அண்ணா வந்து காஞ்சிபுரம் முழுக்க தனது ராயல் என்பீல்ட் இல் கூட்டிக் கொண்டு போய் காண்பித்தார். மதியம் சாப்பிட்ட பின் தான் இரண்டு மனிக்கு மேல் எங்களின் பயணம் தொடங்கியது. இரண்டு முதல் நான்கு வரை எந்த கோவிலும் திறந்திருக்காது என்று சொன்னார். ஆனாலும் கோயில் பார்க்க போனோம். ஊரை விட்டு கொஞ்சமாக தள்ளி இருந்த கைலாசநாதர் கோயில் எனது முதல் விருப்பமாக இருந்தது. மணற்பாறைகளால் கட்டப் பட்ட, மிகப் பழைய இந்த கோயில் எனக்கு மிகவும் பிடித்தது. கையில் கேமரா இல்லை. என் சிறிய செல்போன் கேமராவில் எடுத்த படங்களை இங்கே வைக்கிறேன். பிறகு, ஏகாம்பரனாதர், சுரகேஷ்வரர், பாண்டவதூது பெருமாள், உலகளந்த பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் என பெரிய கொயில்கள் எல்லாமும் பார்த்தேன். பின்னொரு சந்தர்ப்பத்தில் நல்ல கேமராவோடு போகும் போது விரிவாக எழுதுகிறேன். முக்கியமாக, வரதராஜ பெருமாள் கொயிலில் உள்ள சிற்பக் கூடம் கண்டிப்பாக எழுத வேன்டியது.





















புதன், 4 பிப்ரவரி, 2009

அணைகள் உடையும்

பிழைப்புகளில் நிறைய வகை உண்டு
சிலர் உழுது பிழைக்கிறார்கள்
சிலர் உடலை விற்று பிழைக்கிறார்கள்
சிலர் இரந்தும் பிழைக்கிறார்கள்.
ஆனால் உன் பிழைப்பை யாரும் பிழைக்கவில்லை.

அடுத்தவர்களின் உழைப்பில் குளிர் காய
உன் அண்ணன் சொல்லித் தந்தான்.
அடுத்தவர்களின் உணர்வில் குளிர் காய நீ கற்றுக் கொண்டாய்.

அடுத்தவன் உழைப்பை சுரண்டுவது திருட்டு.
உனது வகைமாதிரிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

ஒரு இனமே உன் பின்னால் நின்றது
ஒரு தேசமே உன்னை நம்பியது.
துரோகிகளுக்கு தேச எல்லைகள் இல்லை.
ஈழமானாலும் இங்கேயானாலும்
ஒரே பெயர்தானென்று சொல்லி விட்டாய்.

கல்மடுவை உடைக்க வெடியொன்று போதுமானது.
இங்கேயும் ஒரு வெடி பற்றிக் கொண்டது.
வெடிக்கும் முன் உன் செங்கோல் அணைத்துவிடத் துடிக்கிறது.
அணை உடைய வெகுநாள் ஆகாது.

அவன் பெயர் தமிழன்

ஒரிசாவில் புயல் அடித்த போது
இவன் கண்கள் கலங்கின.

மும்பையில் குண்டு வெடித்த போது
இவனின் நெஞ்சு வெடித்தது.

குஜராத்தில் பூகம்பம் வந்தது
உணவு உடைகளோடு ஓடினான்

கார்கிலில் சண்டை என்றார்கள்
இங்கே உண்டியல் தூக்கினான்.

இப்போது-
அவன் பிள்ளைகள் சாகின்றன.
அவன் பெண்டுகள் மானம் காக்கவும் வழியற்று மாய்கிறார்கள்
அவன் சகோதரனோ-
பதுங்கு குழிகளையோ புதைகுழிகளையோ வெட்டிக் கொண்டிருக்கிறான்.

அவர்களின் கதறலும் அவர்களுக்கான கதறலும்
வங்காள விரிகுடாவில் கரைகிறது.

சொந்தமென்று அவனை நம்ப வைத்தவர்கள்
சும்மா இருந்தார்கள்

கொஞ்சமாவது சூடு வரட்டும்.
கொஞ்சமாவது சொரணை ஊறட்டும்
என்று-
செத்துச் சொல்லிக் காண்பித்தான் முத்துக்குமரன்.

சூடும் வரவில்லை;
சொரணையும் வரவில்லை;
கவிதைதான் வருகிறது.

சனி, 10 ஜனவரி, 2009

கயிறுகள் அவர்களைக் காப்பாற்றின

விதைகள் அவர்களை ஏமாற்றின;
மழைகள் அவர்களை ஏமாற்றின;
விளைபொருட்கள் அவர்களை ஏமாற்றின;
சந்தைகள் அவர்களை ஏமாற்றின;
அரசுகள் அவர்களை ஏமாற்றின;
ஆனால் -
முழநீளக் கயிறுகள் அவர்களைக் காப்பாற்றின.

கடனும் கயிறும் கழுத்தை இறுக்க,
விளை நிலங்களில் பிணமே விளைந்தது.
பிணப் பரிசோதனைகளுக்குக் கூட
பணம் கேட்கிற தேசத்தில் வேறென்ன எதிர் பார்ப்பீர்கள்?

தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவதாய் சொன்னான் ஒருவன்;
அங்கேதான் ஜகத்தினுக்கே உணவளித்தவன்
தனியனாகி அழிந்தான்.

விதர்பாவில் விழுந்த இருளின் நிழல்;
பன்டில்கண்ட் பகுதியில் எழுந்த துயரத்தின் குரல்-
ஆந்திரம், கர்னாடகம் என எங்கெங்கும் விரவியது.


தடையற்ற வாணிபமும் உலகமயமாக்கலும்
வாகை சூடி வலம் வர,
இந்த இறப்புகள்.........
இந்த இழப்புகள்........
அரசுகளுக்கு புள்ளிவிவரமாகவும்
பத்திரிகைகளுக்கு செய்தியாகவும் சுறுங்கும்.

உலகம் இனி ஒற்றைக் கிராமமாக மாறும்.
அங்கே-
அமெரிக்க கொடி
சில நூறு நட்சத்திரங்களுடன் அசைந்தாடும்.

நன்றி: புதிய பயணம் 2009