தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பாகவே இலங்கையில் யுத்த மேகங்கள் திரண்டு விட்டன. ஒட்டு கேட்கும் அரசியல் கட்சிகள் சில சேர்ந்து தி மு க தலைமையில் மத்திய அரசுக்கு ஒரு சால்ஜாப்பு கெடு வைத்தன. நாடகத்தின் அடுத்த காட்சியாக மு. கருணாநிதி நேற்று மனித சங்கிலிக்கு அழைப்பு விடுத்தார். எனக்குத்தெரிந்து கட்சியில் இல்லாதவர்கள் சிலர் கூட சங்கிலியில் பங்கேற்க தயாராக இருந்தனர். உண்மையான உணர்வோடு. ஆனால் நேற்று பெய்த மழைக்கு பயந்து மனிதச்சங்கிலி ஒத்தி வைக்கப்பட்டதென தி மு க அறிக்கை விட்டது. இது எவ்வளவு கேவலமானது?
அங்கே அவர்கள் குண்டு மழையில் வாழ்வையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நம்மால் ஒரு சிலர் மணி நேரங்கள் மழையில் கூட நிற்க முடியாதா? மழையிலும் நமக்காக நம் உறவுகள் நின்றன என்ற குறைந்த பட்சஆறுதலைக்குட அவர்களுக்கு தரத் தயாராய் இல்லாத நமக்கு அவர்கள் பேரை சொல்லி பிழைப்பு நடத்தவோ அரசியல் பண்ணவோ துளியும் அருகதை இல்லை.
இந்த நேரத்தில் கவிஞர் அறிவுமதியின் கவிதை ஒன்று நினைவுக்கு (நன்றி புலியூர் முருகேசன் ) விஷயம் இதுபோல ஆனால் வடிவமும் வார்த்தைகளும் மாறி இருக்கலாம் .
இந்தச்சின்னத் துறலுக்கே
இப்படி இரும்புக் குடைக்குள்
ஒடுங்குகிறீர்களே ..
நாளைய நெருப்பு மழைக்கு
எந்தக் குடையில்
அடேய் ....
எந்தக் குடையில் ?