
கீழே காணும் இரண்டும் சொல்ல வருவது ஒன்றுதான். இரண்டு மாதிரி எழுதி இருக்கிறேன்.
1. வெயிலைத்தாண்டுகிற சிறுமியின்
செருப்பில்லாத பாதங்களுக்காக
நிழலாய்க் கனிகிறது
மரக்கிளை.
2. மரத்தின் கிளைகளினூடே
உருகிவழிந்த
சூரியனின்
வெம்மை தாளாமல்
திட்டுத்திட்டாய் கனிந்திருந்த
நிழல்தீவுகளின் மேல் பாதம் பதித்து
வெயிலைத்தாண்டுகிறாள்
செருப்பில்லாத சிறுமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக