எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
திங்கள், 19 ஏப்ரல், 2010
வெயிலைத்தாண்டுகிற சிறுமி
கீழே காணும் இரண்டும் சொல்ல வருவது ஒன்றுதான். இரண்டு மாதிரி எழுதி இருக்கிறேன்.
1. வெயிலைத்தாண்டுகிற சிறுமியின்
செருப்பில்லாத பாதங்களுக்காக
நிழலாய்க் கனிகிறது
மரக்கிளை.
2. மரத்தின் கிளைகளினூடே
உருகிவழிந்த
சூரியனின்
வெம்மை தாளாமல்
திட்டுத்திட்டாய் கனிந்திருந்த
நிழல்தீவுகளின் மேல் பாதம் பதித்து
வெயிலைத்தாண்டுகிறாள்
செருப்பில்லாத சிறுமி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக