


படிக்கப் படிக்க கோபம் தான் வந்தது. அவர் வெளி நாட்டுக்கு தப்பியோடி விட்டார் என்றும் பாதிரியாராகி விட்டாரென்றும் பல கதைகள் முன்பு உலவின. ஆனால் அவர் ஜான் மாரிமுத்து என்ற பெயரில் ஒரு BPஓ நிறுவனத்தில் மிகவும் நல்ல விதமாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் நுனி நாக்கு ஆங்கில புலமையை மிகவும் அங்கலாய்ப்போடு தினகரன் நாளிதழ் எழுதியது. அதில் பெண்களை வசியப்படுத்துபவனின் கெடு கட்ட தனத்துக்கு ஒப்பானதொரு தொணிஏ எனக்குத் தெரிந்தது. இந்த மாதிரி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படும் நாளிதழ்களை படிப்போர் நிரைய. அவர்களுக்கு இந்த செய்திகல் தப்பான பிம்பத்தை உருவாக்குகின்ரன. ஜான் டேவிட் வெளியில் வந்து எதாவது சட்டவிரோத மக்கல் விரோத காரியங்களில் ஈடு பட்டு இப்போது மீண்டும் மாட்டிக் கொண்டாலாவது பெசலாம். அவர் பாவம் போல அமைதியாக வேலை தான் பார்த்து வந்துள்ளார். அவரின் ஒரு ஆயுட்கால சிறைவாசம் கண்டிப்பாக அவருக்குப் போதுமானது என்பது என் எண்ணம். திருந்தி வாழ்பரை மறுபடியும் பழைய குற்றத்துக்கக சிறையிலடைப்பது சரியல்ல என்றே படுகிறது. காவிரி தண்ணிக்கும், முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கும் பாலாறு பிரச்சனைகலுக்கும் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யாத தமிலக அரசு ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை எதிர்த்து என்னவெல்லாம் பன்னி வருகிறது. தனி மனிதரான ஜான் டேவிட்டையும் இந்த அரசின் கொடுங்கரங்கள் விட்டு வைக்கவில்லை. ஒரு தலைமுறையையே சிறையில் கழித்து விட்ட நளினி முருகன் பேரறிவாளனெல்லாம் சிறையிலேயே வாடுவதால் இந்த அரசுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? தா கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க முடியாத அரசு இங்கெ ஏன் இப்படி ஆட்டம் போடுகிறது? எனது ஆதங்கத்தை ஒட்டிய வேறு ஒரு பதிவையும் கீழுள்ள இணைப்பில் படியுங்கள்.